தமிழகத்துக்கு 25,000 கன அடி நீர் திறப்பு

Tamil nadu Karnataka
By Fathima Aug 02, 2026 04:36 AM GMT
Report

கனமழையால் கர்நாடகா அணைகள் நிரம்பி வருவதால் தமிழ்நாட்டுக்கு திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 25,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவின் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துக்கொண்டிருப்பதால் அணையின் பாதுகாப்பு கருதி தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு முதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்துக்குள் செவ்வாய்கிழமை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விநாடிக்கு 25,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்துக்கு 25,000 கன அடி நீர் திறப்பு | Water Released To Tamil Nadu