ஜெயலலிதாவின் கால் துண்டிக்கப்பட்டதா? அறிக்கை சொல்வது என்ன - அதிமுக தொண்டர்கள் கவலை
ஆறுமுகசாமி ஆணையம் தாக்கல் செய்த அறிக்கையில் ஜெயலலிதாவின் கால் துண்டிக்கப்பட்டதா என்ற அதிமுக தொண்டர்களின் கேள்விக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
கால் துண்டிக்கப்படவில்லை
அவரின் மரணம் குறித்து ஓபிஎஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன் ஜெயலலிதாவுக்கு மெல்ல கொல்லும் விஷம் கொடுக்கப்பட்டதாக தெரிவித்திருந்தார்.
ஜெயலலிதாவின் தலையில் மரக்கட்டையால் தாக்கப்பட்டது என கூறியதும் தவறானது என ஆறுமுகசாமி ஆணையம் தெரிவித்துள்ளது.
மேற்சொன்ன ஆதாரங்களில் முழுங்காலுக்கு கீழே மறைந்த முதல்வரின் கால்கள் துண்டிக்கப்பட்டதாக கூறப்படும் வதந்தியில் எந்த உண்மையும் இல்லையென்றும் அவருக்கு காயங்களோ, மெல்லக் கொல்லும் விஷமோ வழங்கப்படவில்லையென்றும் தெளிவாக உறுதி செய்யப்பட்டு அவை உடனடியாக நிராகரிக்கப்படுகின்றன.