இந்த பாரு பொண்ணு வைரமுத்து கிட்ட ஜாக்கிரதையா இரு : எச்சரித்த சின்மயி..வைரலாகும் பதிவு
நடிகை மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர் அர்ச்சனா, பாடலாசிரியர் வைரமுத்துவுடன் எடுத்த புகைப்பட பதிவிற்கு பாடகி சின்மயி செய்துள்ள கமெண்ட் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
சின்மயி வைரமுத்து விவகாரம் :
வைரமுத்து சின்மயி மீ 2 விவகாரம் கடந்த ஆண்டு தமிழ் சினிமாவில் புயலை கிளப்பியது,இந்த நிலையில் தொலைக்காட்சியின் ராஜா ராணி இரண்டாம் பாகத்தில் நடித்து வருபவர் அர்ச்சனா. இவர், சில நிகழ்ச்சிகளை தொகுத்தும் வழங்கி வருகிறார்.
இவர், சமீபத்தில வைரமுத்துவை சந்தித்ததாக கூறி, அவருடன் எடுத்த போட்டோக்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
அந்த பதிவில் இடம் பெற்றிருந்த புகைப்படங்களில், வைரமுத்து அர்ச்சனாவை ஆசிர்வதிப்பது போன்ற போட்டோக்கள் இடம் பெற்றிருந்தன. இதற்கு பலர் லைக்ஸ் போட்டு “சூப்பர்” என கமெண்ட் செய்துள்ளனர்.
கவனமாக இருங்கள்
அதே சமயம் விஜே அர்ச்சனாவின் பதிவிற்கு, இது போலத்தான் அனைத்தும் ஆரம்பிக்கும். தயவு செய்து கவனமாக இருங்கள். அவரை சந்திக்கையில் யாரையேனும் துணைக்கு வைத்திருங்கள்.அவரிடமிருந்து சற்று தள்ளியே இருங்கள் என கமெண்ட் செய்துள்ளார் சின்மயி.
இந்த பதிவை வெளியிட்டிருந்த அர்ச்சனா, தனது பதிவில் இடம் பெற்றிருந்த சின்மயியின் கமெண்டை நீக்கியுள்ளார்.
ஆனால், அதற்கு முன்னரே சின்மயியின் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.