மணிமேகலையின் விலை உயர்ந்த பைக்கை திருடிய மர்ம நபர்கள் - அதிர்ச்சியில் ரசிகர்கள்
பிரபல சின்னத்திரை நடிகை மணிமேகலை தங்களுக்கு சொந்தமான விலையுயர்ந்த இருசக்கர வாகனத்தை யாரோ திருடி விட்டதாக தெரிவித்துள்ளார்.
சன் மியூஸிக்கில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமான மணிமேகலை கடந்த 2017 ஆம் ஆண்டு ஹூசைன் என்ற நடன இயக்குநரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் சன் குழுமத்திலிருந்து விஜய் டிவிக்கு மாறினார்.
அங்கி மிஸ்டர் & மிசஸ் சின்னத்திரை, கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் சீசன் 2 உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர், தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று தனக்கென தனி ரசிகர்களை கொண்டுள்ளார்.
இந்நிலையில் தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக தனது கணவரின் விலை உயர்ந்த இருசக்கர வாகனமான கே.டி.எம் பைக் திருடு போய்விட்டதாக மணிமேகலை பதிவிட்டுள்ளார். திருமணத்திற்கு பின்னர் மிகவும் கஷ்டப்பட்டு அந்த இரு சக்கர வாகனத்தை வாங்கியதாக அதில் கூறியுள்ளார்.
சென்னை அசோக் நகரில் மணிமேகலையின் குடும்ப நண்பரான அரவிந்த் என்பவருடைய வீடு உள்ளது. கடந்த இரண்டு தினங்களாக அரவிந்த் ஹுசைனின் வாகனத்தை ஓட்டி வந்துள்ளார். இதனிடையே வீட்டு முன்பாக நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திருடு போய்விட்டதாக அரவிந்த், அசோக் நகர் காவல் நிலையத்தில் மணிமேகலையின் சார்பாக புகார் அளித்துள்ளார். இதுகுறித்து அசோக்நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இஸ்ரேலை அடித்து நொறுக்கும் ஈரான்...!: பாலிஸ்டிக் ஏவுகணைகளால் அதிரும் நகரங்கள் - பதிவான மரணம் IBC Tamil
