ரவீந்தரை நெருக்கமாக கட்டியணைத்து தூங்கிய மகாலட்சுமி... - வெளியான புகைப்படத்தால் ஷாக்கான ரசிகர்கள்

Viral Photos
By Nandhini Sep 06, 2022 03:41 PM GMT
Report
255 Shares

காதல் கணவர் ரவீந்தரை கட்டியணைத்து தூங்கிய மகாலட்சுமியின் புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

ரவீந்தர் திருமணம்

சமீபத்தில் திரைப்பட தயாரிப்பாளரான ரவீந்தர் சந்திரசேகர், சீரியல் நடிகை மகாலட்சுமியை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். வி.ஜே மகாலட்சுமிக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து அவருக்கு ஒரு மகன் உள்ளார். மகாலட்சுமி தற்போது லிப்ரா ப்ரொடக்ஷன் ரவீந்தர் சந்திரசேகர் தயாரிக்கும் ‘விடியும் வரை காத்திரு’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

மகாலட்சுமி இரண்டாவது முறையாக தயாரிப்பாளர் ரவீந்தரை திருமணம் செய்ததுதான் தற்போது சமூகவலைத்தளங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. இவர்களது திருமணத்திற்கு ஏராளமான வாழ்த்துக்கள் குவிந்து வந்தாலும், மறுபுறம் கடுமையான விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

ஏகப்பட்ட ட்ரோல் சமூகவலைத்தளங்களில் வலம் வந்தாலும், இருவரும் அதையெல்லாம் கண்டுக்காமல் தங்களுடைய வாழ்க்கையை மகிழ்ச்சிகரமாக தொடங்கியுள்ளனர்.

VJ Mahalakshmi - Ravindran

கட்டியணைத்து தூங்கிய மகாலட்சுமி

தற்போது, இருவரும் நெருக்கமாக எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்தப் புகைப்படத்தில் தன் காதல் கணவர் ரவீந்தரை கட்டியணைத்து நெஞ்சில் மகாலட்சுமி படுத்து தூங்குகிறார்.

இந்த ஹாட் ரொமாண்டிக் புகைப்படத்தை பார்த்து நெட்டிசன்கள் பலர், இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தும், இன்னும் சிலர் இவர்கள் இருவரும் நயன் - விக்கிகே டஃப் கொடுப்பாங்க போல... நாங்களெல்லாம் 90 கிட்ஸ்... இந்த மாதிரி போட்டோவையெல்லாம் பார்த்தா கடுப்பாகுதே... என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.      

VJ Mahalakshmi - Ravindran