நடிகர் விவேக்கின் உடல்நிலைக் குறித்து மருத்துவர்களிடம் விசாரித்தார் விஜயபாஸ்கர்
நடிகர் விவேக் அவர்களுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சிம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சாலிகிராமத்தில் வசித்து வரும் நகைச்சுவை நடிகர் விவேக் அவர்கள் தனது குடும்பத்தினரோடு உரையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மயக்கமடைந்தார். இதனையடுத்து அவர் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட நடிகர் விவேக் அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் விவேக்கின் உடல்நிலை குறித்து சுகாதாரத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் விசாரித்து உள்ளார்.
அது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்ததாவது,
உங்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டது பற்றி கேள்விப்பட்டு மிகவும் வருந்தினேன் விவேக். என்னுடைய பிரார்த்தனைகளும் வாழ்த்துகளுக்கும் உங்களுக்கு உண்டு. சிம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர்களிடம் பேசினேன். சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்களிடம் தொடர்பில் உள்ளேன். விரைவில் நலம்பெற வேண்டும் விவேக் என்று கூறியுள்ளார்.