சர்வதேச சதுரங்க கூட்டமைப்பின் துணை தலைவராக விஸ்வநாதன் ஆனந்த் தேர்வு..!

Tamil nadu 44th Chess Olympiad
By Thahir Aug 08, 2022 01:58 AM GMT
Report

சர்வதேச சதுரங்க கூட்டமைப்பின் துணை தலைவராக விஸ்வநாதன் ஆனந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பதவி காலம் நிறைவு

சர்வதேச சதுரங்க கூட்டமைப்பின் தலைவர் மற்றும் துணை தலைவருக்கான பதவி காலம் நிறைவுற்றதை தொடர்ந்து, சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில், புதிய தலைவர் மற்றும் துணை தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் கடந்த 1 ஆம் தேதி முதல் நாளை 8 தேதி வரை நடைபெறுகிறது.

இந்நிலையில் இன்று சர்வதேச சதுரங்க கூட்டமைப்பின் தலைவராக, ஏற்கனவே பதவி வகித்த ரஷ்யாவை சேர்ந்த ஆண்ட்ரிக் டோகோவிச், இரண்டாவது முறையாக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.

இதற்கு முன்பு 2018 ஆம் ஆண்டு முதல், டோகோவிச் தலைவராக பதவி வகித்து வந்த நிலையில், தற்போது மீண்டும் இரண்டாவது முறையாக பேராதரவுடன் தலைவராக தேர்வு செய்யபட்டுள்ளது .

அதே சமையம் அவரை தொடர்ந்து துணைத் தலைவருக்கான தேர்தல் நடைபெற்றதை அடுத்து, அந்த பதவிக்கு இந்தியாவின் 5 முறை உலக சாம்பியனான கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அகில இந்திய சதுரங்க கூட்டமைப்பின் சார்பில் பல்வேறு கட்ட பரிந்துரைகள் அடிப்படையில் அவருக்கு ஆதரவு இருந்து வந்தது.

விஸ்வநாதன் ஆனந்த் தேர்வு

Viswanathan Anand

இந்நிலையில் இன்று சென்னையில் நடைபெற்ற சர்வதேச சதுரங்க கூட்டமைப்பின் காங்கிரஸ் கூட்டத்தில் இரண்டாவது முறையாக தலைவராக ஆண்ட்ரிக் டோகோவிச்சும், துணைத் தலைவராக விஸ்வநாதன் ஆனந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

கடந்த சில மாதங்களாகவே உலக சதுரங்க கூட்டமைப்பின் துணைத் தலைவராக விஸ்வநாதன் ஆனந்த் தேர்ந்தெடுக்கும் முயற்சி இருந்து வந்த நிலையில், இன்று அவர் துணைத்தலைவராக தேர்வு செய்யப்படுள்ளது தமிழர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.