விஸ்வா தீனதயாளனின் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
தமிழகத்தைச் சேர்ந்தவர் டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன் (18).
இவர் 83வது சீனியர் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொள்வதற்காக கவுகாத்தியிலிருந்து காரில் ஷில்லாங் நோக்கி சென்றுக்கொண்டிருந்தார்.
அப்போது, எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இவரது மறைவிற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், நம்பிக்கைக்குரிய, இளம் டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளனின் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது. சாதனை புரிந்து வந்த விஸ்வா விரைவில் நம்மை விட்டுப் பிரிந்தது வேதனை. கார் விபத்தில் உயிரிழந்த விஸ்வா தீனதயாளனின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல் என தெரிவித்துள்ளார்.
Shocked beyond words to hear about the heartbreaking & untimely demise of our young, promising Table Tennis player Vishwa Deenadayalan. He was a legend-in-making and it pains me that he left us too soon.
— M.K.Stalin (@mkstalin) April 18, 2022
I offer my deepest condolences to his family, friends & sports fraternity. pic.twitter.com/hFlrR0Mycl