'என்ன மன்னிச்சுடு சாமி' - விஜயகாந்த் நினைவிடத்தில் நடிகர்கள் விஷால்,ஆர்யா அஞ்சலி!

Vijayakanth Vishal Tamil Cinema Tamil nadu DMDK
By Jiyath Jan 09, 2024 07:31 AM GMT
Report

நடிகர்கள் விஷால் மற்றும் ஆர்யா இன்று விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்கள்

விஜயகாந்த்

தேமுதிக நிறுவனத் தலைவரும், நடிகருமான விஜயகாந்த் கடந்த 28-ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். இதனையடுத்து அவரது உடல் தேமுதிக தலைமை அலுவலகத்தில் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதனையடுத்து விஜயகாந்த் உயிரிழந்த அன்று வரமுடியாத ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் அவரின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர்கள் விஷால் மற்றும் ஆர்யா இன்று விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஷால் "தமிழ் திரையுலகில் ஒரு மிக சிறந்த நடிகர்.

நடிகர் விஷால் உருக்கம்

கலையுலகத்தில் மட்டுமல்ல பொது மக்களிடம் சிறந்த மனிதர் என்று பெயர் வாங்கிய ஒருவர். ஒரு நல்ல அரசியல்வாதி.

விஜயகாந்தின் தைரியம், உழைப்பு ஆகியவற்றை முன்னுதாரணமாக வைத்து தான் நடிகர் சங்கத்தில் நாங்கள் செயல்பட ஆரம்பித்தோம். விஜயகாந்தின் அலுவலகத்தில் எப்போதும் சமையல் நடந்து கொண்டே இருக்கும். எல்லோரையும் சரிசமமாக பார்க்கும் மனிதன் கேப்டன் (விஜயகாந்த்) மட்டும் தான்.

அவரது மறைவு அன்று நான் இல்லாத சூழல் ஏற்பட்டுவிட்டது. ஒரே ஒரு விஷயம் தான் நான் அவரை பார்த்து சொன்னேன் மன்னித்துவிடு சாமி. நான் அவரது கடைசி நேரத்தில் இருந்திருக்க வேண்டும், ஆனால் என்னால் முடியவில்லை. விஜயகாந்த் குடும்பத்திற்கு நான் கடமைப்பட்டுள்ளேன்" என்று கூறினார்.