பரபரப்பை ஏற்படுத்திய விருதுநகர் பாலியல் வன்கொடுமை வழக்கு - சிபிசிஐடி விசாரணை தொடங்கியது

CBCID Sexual abuse Case Virudhunagar investigation-began விருதுநகர் பாலியல்-வன்கொடுமை சிபிசிஐடி விசாரணை
By Nandhini Mar 25, 2022 06:22 AM GMT
Report

விருதுநகரில் ஆடை தொழிற்சாலையில் பணியாற்றி வந்த இளம்பெண் ஒருவரை திமுக இளைஞரணியைச் சேர்ந்த ஹரிஹரன் என்பவர் காதலித்து வந்துள்ளார்.

அப்பெண்ணுடன் தனிமையில் இருப்பதை ஹரிஹரன் வீடியோவாக எடுத்துள்ளார்.

இதனையடுத்து, திமுக இளைஞரணி அமைப்பாளர் ஜுனைத் மற்றும் 4 பள்ளி மாணவர்கள் சேர்ந்து அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது.

பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் குற்றவாளிகளை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இதற்கிடையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுநகர் பெண் கூட்டு பாலியல் பலாத்கார வழக்கை சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றி உத்தரவிட்டார்.

இந்நிலையில், இவ்வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை தொடங்கியுள்ளனர். விசாரணை அதிகாரியான எஸ்.பி. முத்தரசி விருதுநகர் சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணையை தொடங்கினார். வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முதல் 4 பேரை காவலில் எடுத்து விசாரணை நடத்த சிபிசிஐடி திட்டமிட்டிருக்கிறது.   

பரபரப்பை ஏற்படுத்திய விருதுநகர் பாலியல் வன்கொடுமை வழக்கு - சிபிசிஐடி விசாரணை தொடங்கியது | Virudhunagar Sexual Abuse Cbcid Case