அந்த நாள், நியாபகம்...நெஞ்சிலே வந்ததே நண்பனே! - சேவாக் ரசிகர்கள் வெளியிட்ட வீடியோ

virendra sehwag 10 yrs ago slammed indore against west indies
By Thahir Dec 08, 2021 08:20 AM GMT
Report

இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மறக்க முடியாத நாள் இன்று.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில், ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இரட்டை சதம் அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை இந்தியாவின் முன்னாள் சிறந்த பேட்ஸ்மேன் வீரேந்திர சேவாக் பெற்றார்.

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் கிரிக்கெட் மைதானத்தில், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 219 ரன்கள் குவித்திருந்தார் சேவாக் .

இந்த அபாரமான இன்னிங்ஸில் அவர் 149 பந்துகளில் 25 பவுண்டரிகள் மற்றும் 7 சிறந்த சிக்ஸர்களை அடித்தார்.

இது ஒரு கேப்டனாக அதிக தனிநபர் ஒருநாள் ஸ்கோரின் சாதனையாக உள்ளது.

சேவாக்கின் அதிரடி ஆட்டத்தால் நிர்ணயிக்கப்பட்ட ஐம்பது ஓவர்களில் 418/5 என்ற ஸ்கோரை இந்தியா பதிவு செய்தது.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 153 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.

சேவாக்கின் இந்த ஆட்டத்தை நினைவுகூர்ந்து, கிரிக்கெட் ரசிகர்கள் அதன் வீடியோவை இணையத்தில் வெளியிட்டுள்ளதை தொடர்ந்து அது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.