வெளிநாடுகளில் பட்டையை கிளப்பிய கிங் கோலி- சாதனை மேல் சாதனை
விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்கு தலைமை தாங்குவதில் கடந்த சில ஆண்டுகளில் நிறைய வரலாற்றுமிக்க வெற்றிகளை தேடித் கொடுத்துள்ளார். இந்திய மண்ணில் மட்டும் அல்லாமல் வெளி மண்ணிலும் டெஸ்ட் போட்டிகளில் அவரது தலைமையில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. தற்பொழுது இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்றுவரும் டெஸ்ட் தொடரில் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றிபெற்று அசத்தியுள்ளது.
5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றதன் மூலம் டெஸ்ட் தொடரில் 2-1 என்கிற கணக்கில் முன்னிலையில் உள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதன் மூலம், இங்கிலாந்து மண்ணில் விராட் கோலி தலைமையில் இந்திய அணி வெல்லும் 3-வது டெஸ்ட் போட்டியாக அமைந்தது.
இதன் மூலமாக செனா ( சவுத் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ) நாடுகளில் விராட் கோலி தலைமையில் இந்திய அணி இதுவரை 6 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆசிய கேப்டன்கள் மத்தியில் டெஸ்ட் போட்டிகளில் இந்த குறிப்பிட்ட செனா நாடுகளில் அதிக வெற்றிகளை தேடித்தந்த கேப்டனாக விராட் கோலி முன்னிலையில் உள்ளார்.
ஆசிய கேப்டன்கள் மத்தியில் விராட் கோலி இந்த குறிப்பிட்ட செனா ( சவுத் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ) நாடுகளில் நிறைய சாதனையை தனது பெயருக்குப் பின்னால் தற்பொழுது இணைத்துள்ளார். அதிக ரன்கள், அதிக சதங்கள் மற்றும் தலைமை தாங்குவது அதிக வெற்றிகள் என இந்த மூன்றிலும் தனது பெயரை முதலிடத்தில் நிலைநாட்டியுள்ளார்.
இங்கிலாந்தில் மூன்று போட்டிகளில் வெற்றி, ஆஸ்திரேலியாவில் இரண்டு போட்டிகளில் வெற்றி, தென் ஆப்பிரிக்காவில் ஒரு போட்டியில் வெற்றி என மொத்தமாக 6 போட்டிகளில் அவர் தலைமையில் இந்திய அணி வெற்றி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 4வது டெஸ்ட் போட்டியில் முதல் நாளில் மிகவும் சுமாராக விளையாடிய இந்திய அணி 5-வது நாள் ஆட்ட முடிவில் மிக அற்புதமாக விளையாடி போட்டியை வெற்றி பெற்றது.
100 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சை விளையாடி தொடங்கினாலும் ரோகித் சர்மா அபாரமாக சதமடித்து சிறப்பான துவக்கத்தை ஏற்படுத்தி கொடுத்தார்.
அவருக்கு அடுத்தபடியாக கீழ் வரிசையில் களமிறங்கிய தாகூர் மிக அதிரடியாக அரைசதம் குறித்து இந்திய அணிக்கு பெரிய நம்பிக்கை அளித்தார்.
பந்து வீச்சாளர்களும் மிக சிறப்பாக செயல்பட இறுதி நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியின் அனைத்து விக்கெட்டுகளையும் இந்திய அணி கைப்பற்றி போட்டியை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. ரோகித் சர்மா மற்றும் தாகூர் மிக சிறப்பாக இந்த டெஸ்ட் போட்டியில் விளையாடிய விராட் கோலி பாராட்டு தெரிவித்துள்ளார்.