விராட் கோலியின் புதிய டாட்டூ வைரல் - அதற்கு அர்த்தம் என்ன தெரியுமா?
விராட் கோலியின் புதிய டாட்டூவின் புகைப்படம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
விராட் கோலி
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ஒரு டாட்டூ பிரியர் என்பது நாம் அறிந்தது தான். அதற்கு எடுத்துக்காட்டாக அவரது கைகளில் பல்வேறு டாட்டூக்களை போட்டிருப்பார். இந்நிலையில், தற்போது புதிய டாட்டூ ஒன்றை ஏலியன்ஸ் என்கிற டாட்டூ நிறுவனத்திடம் போட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து, நிறுவன உரிமையாளரான சன்னி பானுஷாலி, அவருக்கு இருக்கும் பேருக்கும் புகழுக்கும், எங்களிடம் மிகப் பணிவாக அன்பாக நடந்துகொண்டார். தன் அடுத்த டாட்டூவையும் எங்களிடமே பெற்றுக்கொள்வதாக தெரிவித்தார். கோலிக்கு டாட்டூ வரையும் நாள் அன்று, மற்ற வாடிக்கையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
புதிய டாட்டூ
காவலுக்கு ஆயுதமேந்திய பாதுகாவலர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். டாட்டூவை துல்லியமாக வரைய பல மணி நேரம் எடுத்தப்போதும், கோலி சலித்துக்கொள்ளவில்லை, மாறாக அதில் இன்னும் அதிக ஈடுபாடுடன் இருந்தார். தேர்ந்தெடுக்கப்பட்ட டிசைனின் நுட்பங்கள் அவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது எனத் தெரிவித்துள்ளார்.
டெஸ்ட், ஒரு நாள் போட்டிகள், ஐபிஎல் என பிஸியாக இருக்கு கோலி இதனை முதல் செஷன் மும்பையில் கிட்ட தட்ட 6 மணி நேரமாகியுள்ளது. இரண்டாவது செஷன் பெங்களூருவில் மீதமிருந்த டிசைனை முடிக்க 8 மணி நேரம் ஆகியுள்ளது.
தன் பழைய டாட்டூவை மறைத்து, புதிய டாட்டூ வரைய முடிவெடுத்த கோலி, தன் ஸ்பிரிச்சுவாலிட்டி, வாழ்க்கையின் ஆதாரம், ஒற்றுமை போன்றவற்றின் பிரதிபலிப்பாக இருக்கவேண்டும் என நினைத்து போட்டுக்கொண்டுள்ளார்.