கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டார் விராட்கோலி
covid19
india
viratkholi
By Irumporai
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்திக்கொண்டார்.
நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம், கடந்த ஜனவரி மாதம் 16-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் ,இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, டெல்லியில் கொரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டார்.
இதுகுறித்த தகவலை அவர் பகிர்ந்துகொண்டுள்ளார். அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள். பாதுகாப்பாக இருங்கள் என கூறியுள்ளார்.
கொரோனா தடுப்புப் பணிகளுக்காக விராட் கோலியும் அவருடைய மனைவி அனுஷ்கா சர்மாவும் ரூ. 2 கோடி நிதியுதவி அளித்தது குறிப்பிடத்தக்கது.