3 மாதங்களில் 3 வகையான போட்டிகளில் ஓய்வு - கோலியின் இந்த அதிரடி முடிவுக்கு என்னதான் காரணம்?

cricket sports virat kohli test captain deviation
By Nandhini Jan 16, 2022 05:26 AM GMT
Report

சர்வதேச கிரிக்கெட்டில் தலைசிறந்த வீரராக வலம் வந்தவர் விராட் கோலி. ஆனால், 3 மாதங்களில் 3 வகையாக போட்டிகளின் கேப்டன் பதவியை துறந்திருக்கிறார். நடந்தது என்ன?, கோலி விலகியது ஏன்? என்பதைப் பார்க்கலாம்.

கிரிக்கெட் விளையாட்டில், ஆக்ரோஷமான பேட்டிங்கால் அனைவரையும் கவர்ந்தவர் விராட் கோலி, சமீப காலமாக இவருடைய அடுத்தடுத்த அறிவிப்புகளால் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.

ஐக்கிய அரபு அமீரத்தில், டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு, டி20 கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக திடீரென்று அறிவித்தார் கோலி.

இருப்பினும், ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அணித் தலைவராகத் தொடர்ந்து செயல்படுவேன் என்று தெரிவித்தார். ஆனால், அண்மையில் தென்னாப்ரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை அறிவித்தபோது, கோலிக்கு ஷாக் கொடுத்தது தேர்வுக் குழு. அவர் எதிர்பார்க்காத வகையில், ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியின் முழு நேர கேப்டனாக ரோகித் ஷர்மா அறிவிக்கப்பட்டார்.

நவம்பரில் டி20 கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய கோலியிடம், டிசம்பரில் ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பதவி பறிக்கப்பட்டது. இந்நிலையில், இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார் விராட் கோலி. தென்னாப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்த இழந்தது.

இந்நிலையில், இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டிருக்கிறார். ஐசிசி கோப்பைகளை வென்றதில்லை என்றாலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் வேறு எந்த இந்திய கேப்டனும் நிகழ்த்தாத சாதனைகளை 7 ஆண்டுகளில் படைத்துள்ளார். 68 டெஸ்ட் போட்டிகளுக்கு தலைமையேற்றுகிறார். 40 வெற்றிகளைப் பெற்றிருக்கிறார். 11 போட்டிகள் டிராவில் முடிந்திருக்கிறது.

17 போட்டிகளில் மட்டுமே தோல்வியடைந்திருக்கிறார். கோலி தலைமையிலான இந்திய அணி 2016 அக்டோபர் முதல் 2020 மார்ச் வரை, 42 மாதங்கள் டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் நீடித்தது.

தென்னாப்ரிக்காவின் செஞ்சூரியனில் டெஸ்ட்டில் வெற்றி கண்ட முதல் ஆசியக் கேப்டன் உள்ளிட்ட சாதனைகளும் கோலியின் பட்டியலில் நீள்கிறது.அளப்பரிய சாதனைகளை தன்வசம் வைத்துள்ள கோலியின் தலைமைப் பொறுப்பு, மூன்றே மாதங்களில் 3 வகையான போட்டிகளிலிருந்தும் முடிவுக்கு வந்திருக்கிறது.