டி20 போட்டிகளில் விராட் கோலி தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்க வேண்டும்... - ரோகன் கவாஸ்கர் பேட்டி

Virat Kohli Indian Cricket Team
By Nandhini Sep 14, 2022 10:08 AM GMT
Report

டி20 போட்டிகளில் விராட் கோலி தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிறால் அணிக்கு பலம் சேர்க்கும் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ரோகன் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

விராட் கோலி

இந்திய முன்னாள் கேப்டன் விராட் கோலி கிரிக்கெட்டில் பல சாதனைகளை செய்தவர். இவர் சமீபமாக தனது விளையாட்டில் தொடர்ந்து சொதப்பி வந்தார்.

சர்வதேச கிரிக்கெட் தொடங்கி உள்ளூர் கிரிக்கெட் வரையில் ரன் குவிப்பதில் வல்லவரான விராட் கோலி கிரிக்கெட் உலகில் ரன் மெஷின் என ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். ஆனால் அவரின் போதாத நேரம் என்பது போல சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் சீசன் தொடரில் சொதப்பினார்.

ஐபிஎல் கிரிக்கெட்டில் அனைத்து சீசன்களையும் சேர்த்து 6499 ரன்களை பதிவு செய்துள்ள அவர் நடப்பு சீசனில் மொத்தம் 12 போட்டிகளில் விளையாடி 216 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். 6 முறை ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி உள்ள கோலி ஒரே ஒரு அரை சதம் மட்டுமே அடித்தார்.

3 போட்டிகளில் அவர் எதிர்கொண்ட முதல் பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். ஆனாலும் அவருக்கு அணி நிர்வாகம் ஆதரவு கொடுத்தே வருகிறது.

பழைய பார்முக்கு திரும்பிய விராட் கோலி

தற்போது நடந்து முடிந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் அரைசதம் அடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் விராட் கோலி. குறிப்பாக பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விராட் கோலி அரைசதம் அடித்தது அவரது ரசிகர்களுக்கு பெரும் சந்தோஷத்தை கொடுத்துள்ளது.

வீரர் ரோகன் கவாஸ்கர் பேட்டி

இந்நிலையில், விராட் கோலி தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்குவது சிறந்த ஆப்ஷனாக இருக்கும் என்று இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ரோகன் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

டி20 போட்டிகளில் விராட் கோலி தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்க வேண்டும்... - ரோகன் கவாஸ்கர் பேட்டி | Virat Kohli Rohan Gavaskar Cricket

இது குறித்து அவர் பேசியதாவது -

விராட் கோலி தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்க அவரே விரும்புவதாக சொல்லியது எனக்கு ஞாபகம் இருக்கிறது. அவர் தொடக்க ஆட்டக்காரராக இறங்கினார், அது இந்திய அணிக்கும் உதவிக்கரமாக இருக்கும்.

அதேபோல 3வது பேட்ஸ்மேனாக சூர்யகுமார் யாதவ் களம் இறங்கினாலும் நன்றாக இருக்கும். இது நடக்க வேண்டும் என்றால், அதற்கு ராகுல் இடத்தை விட்டுகொடுக்க வேண்டும். கோலி யாருக்கு எதிராக சதம் பதிவு செய்தார் என்பது முக்கியமல்ல.

அவர் பதிவு செய்துள்ளது சர்வதேச சதம் என்பதை மட்டுமே நாம் கவனிக்க வேண்டும். விராட் கோலி மீண்டும் ரன் மெஷினாக பார்முக்கு திரும்பி உள்ளார். அது இந்திய அணிக்கு சாதகமாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.