அன்று தோனியும், நீங்களும் பேசிக்கொண்டபோது - அனுஷ்கா ஷர்மாவின் உருக்கமான பதிவு!

MS Dhoni Virat Kohli anushka sharma Rough post
By Thahir Jan 16, 2022 10:01 PM GMT
Report

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலி நேற்று திடீரென டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த செய்தி, கோலியின் ரசிகர்கள் அனைவரையும் பெரும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியது.

இந்த நிலையில் நடிகையும் விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா சர்மா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கோலி டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து வெளியேறியது தொடர்பாக உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

"அன்று தோனியும், நீங்களும் சேர்ந்து ஒருவருக்கு ஒருவர் அரட்டை அடித்து சிரித்துக்கொண்டீர்கள். அப்போது உங்களைப் பார்த்து தோனி, உனக்கு கூடிய சீக்கிரமாகவே தாடி நரைக்கத் தொடங்கும் என்று கேலி செய்தார். நான் உள்பட அனைவரும் அப்போது சிரித்தோம்.

அன்று முதல், உங்கள் தாடி மட்டும் நரைத்திருப்பதை நான் அன்றாட பார்த்து வருகிறேன். அன்று முதல் இன்று வரை உங்களுடைய வளர்ச்சி.

ஆம்,அபார வளர்ச்சி. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக உங்கள் வளர்ச்சியையும் மற்றும் உங்கள் தலைமையின் கீழ் அந்த அணி என்னென்ன சாதனைகளை படைத்துள்ளது என்பதையும் பார்த்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.  

2014 ம் ஆண்டு நீங்கள் கேப்டனாக பதவியேற்றபோது, மிகவும் இளமையாகவும் அப்பாவியாகவும் இருந்தீர்கள்.

உங்களிடம் இருந்த நல்ல எண்ணங்கள், நல்ல நோக்கங்கள் மட்டுமே உங்களை வாழ்க்கையில் இந்த உயரத்திற்குக் கொண்டு சென்றது. சவால்கள் உங்களை அடுத்தடுத்து முன்னேற்றியது.

நீங்கள் உங்கள் பாதையில் இருந்து கடைசிவரை விலகாமல் முன்னோக்கி சென்று கொண்டிருக்கிறீர்கள்.

நீங்கள் எதைச் செய்தாலும் அது சரியானதாகவே இருக்கும். நீங்கள் எப்போதும் எதற்காகவும் பேராசைப்பட்டது இல்லை. எனக்கு நன்றாகத் தெரியும் இந்த கேப்டன் பதவியும் அப்படித்தான்.

நீங்கள் ஒருபோதும் பாசாங்கு செய்ததில்லை. அதுவே உங்களை என்னையும் உங்கள் ரசிகர்கள் அனைவரையும் அதிகம் விரும்ப செய்கிறது. ஒரு பொறுப்பை நாம் இறுக்கிப் பிடித்துகொள்ளும் போதுதான் நாம் கட்டுப்படுத்தி வைக்க படுகிறோம்.

இனி நீங்கள் எல்லையற்றவர். இந்த 7 வருடங்களின் நீங்கள் கற்றவை அனைத்தையும் நம் மகள் பார்ப்பாள். நீங்கள் நன்றாக விஷயங்களை கையாண்டு உள்ளீர்கள்" என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.