என்னை கோலியுடன் ஒப்பிட விரும்பவில்லை…நான் புறக்கணிக்கப்படுகிறேன்…. - பாக். வீரர் வேதனை…!
என்னை கோலியுடன் ஒப்பிடவில்லை என்றும், நான் தேர்வாளர்களால் புறக்கணிக்கப்படுகிறேன் என்றும் பாகிஸ்தான் வீரர் குர்ரம் மன்சூர் வேதனை தெரிவித்துள்ளார்.
என்னை கோலியுடன் ஒப்பிட விரும்பவில்லை
குர்ரம் மன்சூர் பாகிஸ்தானுக்காக 16 டெஸ்ட், 7 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். இவர் 2008ம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் உலகத்தில் அறிமுகமானார்.
இந்நிலையில், மன்சூர் ஒரு யூடியூப் வீடியோ பேசுகையில், நான் என்னை விராட் கோலியுடன் ஒப்பிடவில்லை. உண்மை என்னவெனில், 50 ஓவர் கிரிக்கெட்டில், டாப்-10ல் யார் இருந்தாலும், நான்தான் உலகின் நம்பர்-1. எனக்குப் பிறகு கோலி நிற்கிறார். லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் எனது மாற்று விகிதம் அவரை விட சிறப்பாக உள்ளது. அவர் ஒவ்வொரு 6 இன்னிங்ஸிலும் ஒரு சதம் அடித்தார். ஒவ்வொரு 5.68 இன்னிங்ஸிலும் சதம் அடிக்கிறேன்.
கடந்த 10 ஆண்டுகளில் எனது சராசரியான 53 அடிப்படையில், லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் உலக அளவில் 5வது இடத்தில் உள்ளேன். கடந்த 48 இன்னிங்ஸ்களில் 24 சதங்களும் அடித்துள்ளேன். 2015 முதல் இப்போது வரை, பாகிஸ்தானுக்காக யார் ஓபன் செய்திருந்தாலும், அவர்களில் நான் இன்னும் முன்னணி வீரராகவே இருக்கிறேன்.
தேசிய டி20யில் அதிக சதம் அடித்தவரும், சதம் அடித்தவரும் நானே. ஆனாலும் நான் புறக்கணிக்கப்படுகிறேன். அதற்கான உறுதியான காரணத்தை இதுவரை யாரும் என்னிடம் கூறவில்லை,” என்றார்.
குர்ரம் 166 லிஸ்ட் ஏ ஆட்டங்களில் 27 சதங்களுடன் 7992 ரன்கள் எடுத்துள்ளார். அவரது பேட்டிங் சராசரி 53.42. கோலி 294 இன்னிங்ஸில் 50 சதங்களுடன் 14215 ரன்கள் எடுத்துள்ளார்.