உங்கள் விளையாட்டை வார்த்தையால் விவரிக்க முடியாது... அது வரம்... - ரொனால்டோவுக்கு விராட் கோலி பாராட்டு

Virat Kohli Cristiano Ronaldo
By Nandhini Dec 12, 2022 11:16 AM GMT
Report

உங்கள் விளையாட்டை வார்த்தையால் விவரிக்க முடியாது. அது கடவுள் கொடுத்த வரம் என்று ரொனால்டோவுக்கு விராட் கோலி பாராட்டு தெரிவித்துள்ளார்.

உலக கோப்பை கால்பந்து தொடர் -

பிபா சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை கால்பந்து உலக கோப்பை தொடரை நடத்தி வருகிறது.

கால்பந்து உலக கோப்பை தொடர் உலக அளவில் கால்பந்து ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் விளையாட்டு திருவிழாவாகும். உலக கோப்பை கால்பந்து கடைசிப் போட்டி ரஷ்யாவில் 2018ம் ஆண்டு நடைபெற்றது. இதில் பிரான்ஸ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

இந்நிலையில், 4 வருடங்களுக்கு பிறகு உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் தொடங்கி உள்ளது. இப்போட்டியில், பிரான்ஸ், பிரேசில், ஜெர்மனி, அர்ஜென்டினா, இங்கிலாந்து, ஸ்பெயின் உள்பட 32 நாடுகள் கலந்து கொண்டுள்ளன. 32 அணிகளின் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் விளையாடி வருகின்றன.

கண்ணீர் விட்டு அழுத ரொனால்டோ

உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் நேற்று முன்தினம் இரவு அல்துமாமா மைதானத்தில் கால் இறுதி ஆட்டத்தில் மொராக்கோ - போர்ச்சுகல் அணிகள் நேருக்கு நேர் மோதின.

இப்போட்டியில் போர்ச்சுக்கல் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மொராக்கோ அணி அரையிறுதிக்கு முன்னேறிச் சென்றது. இத்தோல்வியால் கிறிஸ்டியானோ ரொனால்டோ மைதானத்திலேயே கண்ணீர் விட்டு அழுதார்.

virat-kohli-cristiano-ronaldo-wishes

ரொனால்டோவுக்கு விராட் கோலி பாராட்டு

இந்நிலையில், தன் டுவிட்டர் பக்கத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி, ரொனால்டோவுக்கு பாராட்டி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், கால்பந்து மற்றும் ரசிகர்களுக்காக நீங்கள் செய்ததை, எந்த கோப்பை மற்றும் பட்டத்தாலும் பறிக்க முடியாது. மக்கள் மீது நீங்கள் ஏற்படுத்திய தாக்கத்தையும், நீங்கள் விளையாடுவதை பார்க்கும்போது ஏற்படும் உணர்வுகளையும் வார்த்தையால் விவரிக்க முடியாது. அது கடவுள் கொடுத்த வரம்.

இது ஒவ்வொரு முறையும் மனதார விளையாடுபவருக்கான ஆசீர்வாதம். உங்கள் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு எந்த விளையாட்டு வீரருக்கும் உத்வேகமாக இருக்கும். நீங்கள் எப்போதும் எனக்கு சிறந்தவர்தான் என்று நெகிழ்ச்சியோடு விராட்கோலி ரொனால்டோவுக்கு வாழ்த்தி பாராட்டு தெரிவித்துள்ளார்.