ஐபிஎல் தொடரில் இவர்கள் தான் எதிரி; சிஎஸ்கே இல்லை- விராட் கோலி
ஐபிஎல் தொடரில் ஆர்சிபியின் எதிரி குறித்து விராட் கோலி தெரிவித்துள்ளார்.
விராட் கோலி
ஆர் சி பி அணியின் கேப்டனாக 2013 ஆம் ஆண்டிலிருந்து 2020 ஆம் ஆண்டு வரை விராட் கோலி தொடர்ந்தார். ஒரு வருடத்தில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பல சாதனைகளை விராட் கோலி படைத்துள்ளார்.
இருப்பினும் அந்த அணி இதுவரை ஒரு முறை கூட சாம்பியன் பட்டத்தை வெல்லவில்லை. கடந்த சீசனில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகள் விழும்போது விராட் கோலி அடாவடித்தனமாக நடந்து கொண்டார்.
எதிரி அணிகள்
இதனால் ஆர்சிபிக்கும் சிஎஸ்கேவும் தான் ஆகாது என்று ரசிகர்கள் கருதிக்கொண்டிருந்தனர். இந்நிலையில், இதுதொடர்பாக விளக்கமளித்துள்ள விராட் கோலி, ஐபிஎல் தொடரில் ஆர்சிபிக்கு எதிரி அணிகள் எது என்று கேட்கப்பட்டதற்கு,
அவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் எனத் தெரிவித்துள்ளார். இந்த இரு அணிகளுக்கும் இடையே உள்ள பகையை தான் விரும்புவதாகவும் கூறியுள்ளார்.