கோலியை நாங்க போகச் சொல்லவில்லை : ரகசியம் சொன்ன தேர்வாளர் சேத்தன் ஷர்மா
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று ஒருநாள் தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் ரோஹித் ஷர்மா காயம் காரணமாக விலகியதால், ஒருநாள் தொடருக்கான கேப்டனாக கே.எல்.ராகுலை நியமிக்கப்பட்டதாக ,இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை தேர்வாளர் சேத்தன் ஷர்மா அறிவித்தார்.
இந்த நிலையில் வீடியோ கால் வழியாக பத்திரிக்கையாளர்களை சந்தித்த சேத்தன் ஷர்மா :
விராட் கோலியின் டி20 கேப்டன்சி குறித்த கேள்விக்கு பதில் அளித்தார். அதில், டி20 கேப்டன்சி பதவியில் இருந்து விலக வேண்டுமென்பது விராட் கோலியின் முடிவு. அவர் கேப்டன் பதவியிலிருந்து விலகியதும், வைட்-பால் கிரிக்கெட்டுக்கு ஒரு கேப்டன்தான் இருக்க வேண்டும் என்பதில் பிசிசிஐ தெளிவாக இருந்தது.
No one asked Virat Kohli to quit T20 captaincy. As soon as Selection Committee's meeting on white-ball captaincy got over, I informed him. We had a good chat & he agreed. We didn't want to involve him in the meeting: Chetan Sharma, Chairman of BCCI's Senior Selection Committee
— ANI (@ANI) December 31, 2021
இது குறித்து முடிவு எடுக்கப்பட்டவுடன் கோலிக்கு தெரிவிக்கப்பட்டது. அவருக்கு சில கேள்விகள் இருந்தது. அதை பற்றி பேசி முடித்த பின்பு அவர் ஒப்புக்கொண்டார்.
இந்திய அணி தேர்வாளர்களுக்கும், வீரர்களுக்கும் இடையே தெளிவான பேச்சுவார்த்தை இருக்கும், குழப்பம் இருக்காது. கேப்டன்சி குறித்த முடிவுகள் என்றாலும், ப்ளேயிங் லெவனை தேர்வு செய்யும் முடிவாக இருந்தாலும் அது மிகவும் சவாலான வேலை.
சவாலாக இருந்தாலும் முடிவை எட்டிதான் ஆக வேண்டும். கோலி இந்திய அணியின் மிக முக்கியமான வீரர். தொடர்ந்து இந்திய அணிக்காக அவர் விளையாட வேண்டும்” என தெரிவித்தார்.
அதே சமயம், தென்னாப்ரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்க்கொள்ளும் முன்பு பத்திரிக்கையாளர்களை சந்தித்த கோலி, “நான் டி20 கேப்டன் பதவியில் இருந்து விலக உள்ளேன் என்ற எனது முடிவை அறிவித்தபோது பிசிசிஐ ஏற்றுக்கொண்டது.
என்னுடைய முடிவை மாற்றச்சொல்லி பிசிசிஐ தரப்பில் எந்த கோரிக்கையும் வைக்கப்படவில்லை. இந்த முடிவு சரியானதுதான் என பிசிசிஐ கூறியதாக விராட் கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.