போதை ஏறி போச்சு : கழிவுநீர் கால்வாயில் விழுந்த குடிமகன் வைரலாகும் புகைப்படம்
Tamil nadu
Viral Photos
By Irumporai
கிருஷ்ணகிரியில் கனமழை பெய்த நிலையில், கழிவு நீர் கால்வாயில் மதுபோதையில் நபர் ஒருவர் தவறி விழும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கன மழை பெய்தது.
இதன் காரணமாக சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், தாழ்வான பகுதிகளிலும் தண்ணீர் தேங்கியது. இதனால், மக்கள் சிரமமடைந்தனர். இந்த நிலையில், பிரதான சாலையில் வாகன போக்குவரத்து நெரிசல் நிறைந்து காணப்பட்ட நிலையில், மது போதையில் ஒருவர் சாலையை கடக்க முயன்றார்.
அப்போது திடீரென அந்த நபர் கால் தடுமாறி கழிவுநீர் கால்வாயில் விழுந்தார். இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் போதை ஆசாமியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.