கைக் குழந்தையை சுமந்துக்கொண்டு ரோட்டில் தூய்மை பணி செய்த பெண் - வைரலாகும் வீடியோ
துாய்மை பணியாளர் பெண் ஒருவர் தனது குழந்தையை முதுகில் சுமந்த படி தன் பணியை செய்து வரும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த லஷ்மி என்ற பெண் துாய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார்.
இவர் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் சாலையில் தனது குழந்தையை தோளில் சுமந்த படி சாலையில் துப்புறவு பணி செய்து கொண்டிருக்கிறார்.
இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக வைரலாகி வருகிறது. இதுவரை இந்த வீடியோவிற்கு 7,400 க்கும் மேற்பட்ட லைக்குகள் கிடைத்துள்ளன.
இது குறித்து லக்ஷ்மி மகி கூறுகையில், நான் கடந்த 10 ஆண்டுகளாக பரிபாடா நகராட்சியில் வேலை பார்த்து வருகிறேன்.
வீட்டில் என் குழந்தையை கவனிக்க யாரும் கிடையாது. ஆதலால், குழந்தையை முதுகில் சுமந்து கொண்டு பணி புரிந்து வருகிறேன். இதனால், எனக்கு பிரச்சனை இல்லை. இது என் கடமை என்றார்.
இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், இந்த பெண்ணிற்கு ஏதாவது உதவிகளை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கமெண்ட் செய்து வருகின்றனர்.
#WATCH | Odisha: A lady sweeper, Laxmi cleans the road in Mayurbhanj district with her baby tied to her back. pic.twitter.com/g7rs3YMlFn
— ANI (@ANI) May 29, 2022