பஸ்ஸில் பாலியல் தொல்லை கொடுத்த குடிகார ஆசாமியை தர்ம அடி கொடுத்து புரட்டி எடுத்த சிங்கப்பெண் - வைரலாகும் வீடியோ

Viral Video
By Nandhini May 31, 2022 07:30 AM GMT
Report

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் பனமாரம் பகுதியை சேர்ந்த சந்தியா என்ற பெண் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெங்கப்பள்ளி நோக்கி செல்லும் பேருந்தில் பயணம் செய்துள்ளார். அப்போது, மது போதையில் பூவாழன் என்ற நபர் பேருந்தில் ஏறி இருக்கிறார்.

குடிபோதையில் இருந்த அந்த நபர் சந்தியா அமர்ந்திருந்த இருக்கையில் அமர்ந்துள்ளர். அந்த குடிகார ஆசாமி, சந்தியாவுக்கு பாலியல் ரீதியில் தொல்லை கொடுத்திருக்கிறார். இதனால், ஆத்திரமடைந்த சந்தியா வேறு இருக்கைக்கு சென்று அமர்ந்துள்ளார்.

ஆனால், மீண்டும் மீண்டும் சைகையை காட்டி அந்த குடிகார ஆசாமி, சந்தியாவுக்கு பாலியல் ரீதியில் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இதை கவனித்த சக பயணிகள் நடத்துனரிடம் கூறி அந்த நபரை வேறு இருக்கையில் அமர வைக்கும்படி கூறினர். இதனால், ஆத்திரமடைந்த அந்த குடிகாரன் சந்தியாவை தகாத வார்த்தையால் திட்டியுள்ளான்.

ஒரு கட்டத்தில் போதை தலைக்கேறிய நிலையில் பேருந்துக்குள் சந்தியாவின் கன்னத்தில் அடித்துள்ளான். இதனால் உச்சகட்ட ஆத்திரமடைந்த சந்தியா குடிகார ஆசாமியை கீழே தள்ளி, நடுரோட்டில் எட்டி உதைத்து தர்ம அடி கொடுத்துள்ளார்.

இது குறித்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இப்பெண்ணின் துணிச்சலாக செயலை பலர் இணையத்தில் பாராட்டி வருகின்றனர்.