தெரு நாய்கள் பிடியில் சிக்கிய குழந்தை... - வெறியோடு கடித்து கொதறிய அதிர்ச்சி வீடியோ வைரல்
சமூகவலைத்தளங்களில் ஜெய்ப்பூரில் நடந்த ஒரு அதிர்ச்சியான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், ஜெய்ப்பூரில் உள்ள ராதா நிகுஞ்ச் காலனியைச் சேர்ந்த குழந்தை ஒன்று வீட்டிற்கு முன்பு நடந்துச் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது, அங்கு ஆட்கள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் அங்கு கூடியிருந்த 8க்கும் மேற்பட்ட நாய்கள் அந்தக் குழந்தையை கொடூரமாக கடித்து கிழித்து தாக்குகின்றனர்.
அந்த குழந்தை நாய்களின் பிடியில் சிக்கித் தவித்து அலறுகிறது. வெறியோடு அந்த நாய்கள் ஒன்று சேர்ந்து அந்தக் குழந்தையை கடித்து கொதறுகிறது.
அப்போது, அந்த வழியாக வந்தவர்கள் குழந்தை நாய்கள் பிடியில் சிக்கி அலறுவதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து, உடனே வாகனத்தை நிறுத்திவிட்டு நாய்களை துரத்தி அடித்து, குழந்தையை பத்திரமாக மீட்கின்றனர்.
மீட்கப்பட்ட குழந்தைக்கு உடல் முழுவதும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பலத்த காயமடைந்த குழந்தைக்கு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்த சிசிடிவி வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
JAIPUR DOG ATTACK
— Mirror Now (@MirrorNow) May 27, 2022
In a video that has gone #viral, a group of dogs are seen mauling a child in #Jaipur. The dogs are seen surrounding the child & attacking him as he tries to run away. Watch. pic.twitter.com/RjSZt1bHra