நடுரோட்டில் ரொம்ப நேரமாக கிடந்த பிணம் - சோதனையில் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் - வைரலாகும் வீடியோ

Viral Video
By Nandhini May 26, 2022 06:00 AM GMT
Report

சமூகவலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் சாலையில் நீண்ட நேரமாக வெள்ளைக் கவரால் சுற்றப்பட்ட மனித உடல் கிடந்துள்ளது. அந்த வழியாக சாலையில் சென்றவர்கள் இதைப் பார்த்ததும் சந்தேகப்பட்டு கூட்டம் கூடினர். கூட்டம் அதிகமாகவே அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

நீண்ட நேரமாக எந்த அசையுமின்றி அந்த மனித உடல் கிடந்ததால் ஒருவேளை அது பிணமாக இருக்குமோ என்று அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த வெள்ளைக் கவரை திறந்து பார்த்தனர்.

அப்போது, அந்த வெள்ளைக் கவருக்குள் ஒருவர் நன்றாக தூங்கிக்கொண்டிருந்தது தெரியவந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் அந்த நபரை தட்டி எழுப்பினர்.

அப்போது, தூக்கம் கலைந்த அந்த நபர் தலையை சொறிந்துக் கொண்டு எழுந்து நின்று பார்த்தார். அவரைச் சுற்றி கூட்டம் இருந்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து அங்கிருந்து எழுந்து புறப்பட்டுச் சென்றார்.

இதைப் பார்த்த கூட்டம் சிரித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது.

தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.