வெறியோடு ஒருத்தரின் தலைமுடியை விடாமல் பிடித்து இழுத்த குரங்கு - வைரலாகும் வீடியோ
Viral Video
By Nandhini
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், வனவிலங்கு சரணாலயத்தில் பார்வையாளர்கள் மத்தியில் ஒரு நபரின் முடியை குரங்கு ஒன்று ஆக்ரோஷமாக பிடித்து இழுக்கிறது. குரங்கின் பிடியிலிருந்து அந்த நபர் விடுவிக்க முயற்சி செய்கிறார். ஆனாலும், அக்குரங்கு அவரை விடுவதாக இல்லை.
ஒருவழியாக, அதன் பிடியிலிருந்து அந்நபர் தப்பிக்கிறார். ஆனால், இவர் அக்குரங்கிடம் மாட்டிக்கொண்டபோது, பார்வையாளர்கள் செல்போனில் படம் எடுத்தார்களே தவிர, அவருக்கு உதவி செய்ய யாரும் முன் வரவில்லை.
தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.