மிரள வைத்த வைத்த திருமண 'ப்ளக்ஸ் பேனர்'
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருமணத்திற்கு வைத்துள்ள ப்ளக்ஸ் பேனர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே உள்ள கனியாமூரைச் சேர்ந்த பெறியாளர் ராஜ்குமார் என்பவருக்கு நடைபெற்ற திருமணத்திற்கு தான் அவரது நண்பர்கள் வித்தியாசமான முறையில் ப்ளக்ஸ் பேனர் வைத்துள்ளனர்.
அதில் மணமகனை தொற்றாளர் எனவும், மணமகளை தொற்றிக் கொண்டவர் எனவும் குறிப்பிட்டதோடு திருமணத்தை கோவிட்-19 என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் பேனரை அடித்தவர்களின் பெயர்கள்... நிலவேம்பு சிவா, ரத்தக்கொதிப்பு ரமேஷ், கோவிட் குமார், பாசிடிவ் பிரகாஷ், வைரஸ் வசந்த், சுடுதண்ணி சுப்ரமணி, காய்ச்சல் கருப்பன், தும்மல் சேகர், ஆம்புலன்ஸ் ஆதி, கோவக்சின் சூரியா, சானிடைசர் ஸ்ரீராம் என அடைமொழியோடு குறிப்பிட்டுள்ளனர்.
அதேபோல் இனி மணமகன், போராட வேண்டியது கொரோனாவுடன் அல்ல... மனைவியுடன் என்றும் கிண்டலடித்து உள்ளனர்.