மீண்டும் மணிப்பூரில் வெடித்த வன்முறை - 24 மணி நேரத்தில் 6 பேர் இறப்பு

India Domestic Violence Manipur
By Karthick Aug 07, 2023 01:05 AM GMT
Report

சில நாட்களாக ஓய்ந்திருந்த மணிப்பூர் கலவரம் தற்போது மீண்டும் துவங்கிய நிலையில், 24 மணிநேரத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

மணிப்பூர் கலவரம்

குக்கி மற்றும் மைத்தி மக்களுக்கு இடையே உண்டான மோதல், 3 மாதங்களை கடந்து தற்போது தொடர்ந்து வருகின்றது. சில நாட்களாக இந்த மோதல் போக்கு அடங்கியிருந்த நிலையில், தற்போது மீண்டும் அந்த மாநிலத்தில் கலவரம் வெடித்துள்ளது.

violence-outbreak-again-in-manipur

நேற்று அதிகாலையில் இருந்து பிஷ்ணுபூர்-சுராசந்த்பூர் எல்லைப் பகுதிகளில் ஒரு நாளாக நீடித்த தாக்குதல்களில் சுமார் 16 பேர் காயமடைந்துள்ளனர். இதில், இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ரோந்து பணியில் ராணுவத்தினர்  

இந்த மோதல் போக்கை தடுக்க துணை ராணுவ படையினர் மணிப்பூர் முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்ற நிலையிலும், தற்போது வரை நிலைமையை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வர இயலவில்லை.

violence-outbreak-again-in-manipurhttps://www.bbc.com/tamil/articles/ckmk7nxeynmo

இதன் காரணமாக பிஷ்ணுபூர் பகுதிகள் முழுமையாக முடங்கிப்போயுள்ளன. நகரம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.