நூறாக படை நூறாக தொட்ட இடமெல்லாம் தூளாக: 41 வயதில் வெண்கலம் வென்றார் இந்திய வீரர் வினோத் குமார்
டோக்கியோ நகரில் நடைபெற்று வரும் பாராலிம்பிக்கில் வட்டு எறிதல் விளையாட்டில் வெண்கலம் வென்றுள்ளார் 41 வயதான இந்திய வீரர் வினோத் குமார். F பதக்கத்தை வென்றுள்ளார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 16வது பாராலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. மாற்றுத்திறனாளிகளுக்கான இந்த போட்டிகளில் 162 நாடுகளை சேர்ந்த 4,403 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இதில், டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு போட்டியில் இந்திய வீராங்கனை பவினா பென் படேல் வெள்ளிப்பதக்கம் வென்று இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை பெற்று கொடுத்தார்.
இந்த நிலையில்,டோக்கியோவில் நடைபெற்ற பாராலிம்பிக் உயரம் தாண்டுதல் டி 47 இறுதிப் போட்டியில் இந்திய வீரர் நிஷாத் குமார் 2.06 மீ தாண்டி வெள்ளி வென்று சாதனைப் புரிந்துள்ளார்.
Vinod Kumar wins bronze medal in Discus Throw F52 at Tokyo #Paralympics
— ANI (@ANI) August 29, 2021
(file pic) pic.twitter.com/pqapALYtDi
இதன்மூலம், ஆசிய சாதனையை அவர் படைத்துள்ளார். மேலும்,இது பாராலிம்பிக்கில் இந்தியா பெற்ற இரண்டாவது பதக்கம் ஆகும். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற வட்டு எறிதல் போட்டியிலும் இந்திய வீரர் வினோத் குமார் 19.91 மீட்டர் தூரம் வீசி வெண்கலப் பதக்கம் வென்றார்.