திரும்ப பெறப்பட்ட இந்திய வீரரின் பதக்கம் - பாராலிம்பிக்கில் அதிர்ச்சி
பாராலிம்பிக் போட்டியில் வட்டு எறிதல் பிரிவில் வினோத் குமார் வென்ற பதக்கம் திரும்பப் பெறப்பட்டது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக்ஸ் தொடர் கடந்த ஆகஸ்ட் 24 ஆம் தேதி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவில் 54 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.
இதில் வட்டு எறிதல் விளையாட்டில் 41 வயதான இந்திய வீரர் வினோத் குமார் வெண்கலம் வென்றார். ஆனால் அவரது உடல் திறனை வகைப்படுத்தியதில் குறைபாடுகள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அவர் எப்52 எனப்படும் தசைபலம் தளர்வு, கை, கால்களில் குறைபாடு மற்றும் முதுகு தண்டுவட பாதிப்பு உள்ளோர் பிரிவில் பதக்கம் வென்றிருந்தார். இந்த நிலையில் தொழில்நுட்பக்குழுவினர் எடுத்த முடிவில் அடிப்படையில் வினோத்குமாரின் பதக்கம் திரும்பப் பெறப்பட்டுள்ளது.
இதனால் இந்திய ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.