கள்ளச்சாராய பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு : அதிர்ச்சியில் பொதுமக்கள்

By Irumporai May 16, 2023 03:25 AM GMT
Report

மரக்காணத்தில் கள்ளச்சாராய சம்பவத்தில் பலி 13ஆக உயர்ந்துள்ளது.

கள்ளச்சாராய பலி

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் அருந்தியத்தில் 39 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் தற்போதுவரை 12 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் அருந்தி, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜவேல் என்பவர் உயிரிழந்துள்ளார். இதனால், கள்ளச்சாராயம் அருந்தி பலியானோர் எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளது. இப்பொது, சிகிச்சையில் உள்ளவர்களுக்கு உயர் சிகிச்சை அளிக்குமாறு மருத்துவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.