செட்டில்மென்ட் ஆகிடுச்சு அதாகிடுச்சுன்னா அவ்வளவுதான்; என்ன அப்படி தள்ளிடாதீங்க - விளாசிய விஜயலெட்சுமி

Vijayalakshmi Seeman
By Sumathi Sep 17, 2023 03:10 AM GMT
Report

 வீரலட்சுமி தொடர்ந்து பேசினால் சட்ட நடவடிக்கை எடுப்பேன் என நடிகை விஜயலெட்சுமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 வீரலட்சுமி குற்றச்சாட்டு

நடிகை விஜயலட்சுமி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை கைது செய்யக் கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். திருமண மோசடி, கட்டாய கருக்கலைப்பு உள்ளிட்ட புகார்களைத் தெரிவித்திருந்தார்.

செட்டில்மென்ட் ஆகிடுச்சு அதாகிடுச்சுன்னா அவ்வளவுதான்; என்ன அப்படி தள்ளிடாதீங்க - விளாசிய விஜயலெட்சுமி | Vijayalakshmi Warns Veeralakshmi In Seeman Issue

இப்புகார் தரும் போது விஜயலட்சுமிக்கு உடன் இருந்தவர் வீரலட்சுமி. தற்போது திடீரென விஜயலட்சுமி, சீமான் மீதான புகாரை வாபஸ் பெறுவதாக அறிவித்துவிட்டு பெங்களூர் சென்றுவிட்டார். ஆனால் வீரலட்சுமி, விஜயலட்சுமியிடம் சீமான் காலில் விழுந்துவிட்டார்;

 விஜயலெட்சுமி  எச்சரிக்கை

அவருக்கு பணம் கொடுத்து செட்டில் செய்துவிட்டார் என்றார். இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள விஜயலெட்சுமி, சீமான் என்னுடன் வாழ்கிறாரோ இல்லையோ. சீமான் தான் என் கணவர். நான் அவரை அப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். அவர் என்னை எப்ப விட்டுட்டு போனாரோ அப்ப இருந்துட்டு நான் பெரிதாக சிங்காரித்துக் கொண்டு பூ வைத்து எல்லாம் இருப்பது கிடையாது.

செட்டில்மென்ட் ஆகிடுச்சு அதாகிடுச்சுன்னா அவ்வளவுதான்; என்ன அப்படி தள்ளிடாதீங்க - விளாசிய விஜயலெட்சுமி | Vijayalakshmi Warns Veeralakshmi In Seeman Issue

ஒரு கணவரை இழந்த பொண்ணு மாதிரிதான் நான் எப்பவும் இருப்பேன். இதையெல்லாம் வாங்கிக் கொடுத்தாலும் போடமாட்டேன் என்று சொன்னேன். அவர் வாங்கி கொடுத்ததையும் அவர் வீட்டில் வைத்துவிட்டு வந்துவிட்டேன். நீங்க தொடர்ந்து அவதூறுகளை பேசுகிட்டு இருக்கீங்க. சென்டில்மென்ட் ஆகிடுச்சு.. அதாகிடுச்சு..

இதாகிடுச்சுன்னு பேசிகிட்டு இருந்தீங்கன்னா நான் சென்னையில் இல்லை என்றாலும் என்னுடைய வழக்கறிஞர் சென்னையில்தான் இருக்காங்க. தொடர்ந்து செட்டில்மென்ட் ஆகிடுச்சு அதாகிடுச்சுன்னு பேசுனா நானும் வேறவழியே இல்லாம உங்க மேல மான நஷ்ட வழக்கு போட வேண்டியது வரும். அப்படி ஒரு சூழ்நிலைக்கு தயவு செய்து என்னை தள்ளிடாதீங்க என வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.