சீமான், விஜயலட்சுமியை ஏமாற்றி 7 முறை கருக்கலைப்பு; இந்த பாலியல் புகார் தீவிரமானது - நீதிமன்றம்
சீமானுக்கு எதிரான புகார் தீவிரமானது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பாலியல் புகார்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான், நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பேரில் வளசரவாக்கம் போலீஸார் கடந்த 2011-ம் ஆண்டு பாலியல் துன்புறுத்தல் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் பிறப்பித்துள்ள உத்தரவில், நடிகரும், இயக்குநரும், தற்போது அரசியல் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் உள்ள சீமான் இயக்கிய படத்தில் நடிகை விஜயலட்சுமி நடித்துள்ளார்.
அதில் ஏற்பட்ட பழக்கம் காரணமாக தனது குடும்ப பிரச்சினைகளுக்கு தீர்வு காண உதவி கேட்டு சீமானை விஜயலட்சுமி அணுகியுள்ளார். அப்போது விஜயலட்சுமியை திருமணம் செய்து கொள்வதாக உத்தரவாதம் அளித்துள்ள சீமான். அவருடன் பாலியல் ரீதியாக உறவு கொண்டு திருமணத்துக்கு மறுத்து மிரட்டலும் விடுத்துள்ளார்.
நீதிமன்ற உத்தரவு
பின் சீமானுக்கு எதிராக அவர் போலீஸில் பாலியல் புகாரளித்துள்ளார். இந்த வழக்கில் 15 சாட்சிகளிடம் போலீஸார் வாக்குமூலம் பெற்றுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருவருக்குமிடையே காதல் இல்லை. உதவி கேட்டு சென்றபோது திருமணம் செய்து கொள்வதாகக் கூறி விஜயலட்சுமியிடம் சீமான் உறவு கொண்டுள்ளார்.
சீமான் பாலியல் ரீதியாக ஏமாற்றியதால் விஜயலட்சுமி சுமார் 7 முறை கருக்கலைப்பும் செய்துள்ளார். அதுமட்டுமின்றி விஜயலட்சுமியிடமிருந்து பெரும் தொகையையும் சீமான் பெற்றுள்ளார். மனஉளைச்சல் மற்றும் மிரட்டல் காரணமாகவே விஜயலட்சுமி புகாரை வாபஸ் பெறுவதாக தெரிவித்துள்ளார்.
சீமானுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டு மிகவும் தீவிரமானது. இதில் புகாரை வாபஸ் பெற்றாலும் கூட சமரசம் செய்து கொள்ள முடியாது. கடந்த 2023 வரை இருவருக்குமிடையே ஏதோ ஒருவகையில் தொடர்பு இருந்து வந்துள்ளது. எனவே சீமானுக்கு எதிரான பாலியல் வழக்கை ரத்து செய்ய முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார்.