கேப்டன் கேப்டன் என முழக்கம்....அதிர்ந்த கோயம்பேடு...தொண்டர்களை சந்தித்தார் விஜயகாந்த்..!!
இன்று தனது 71-வது பிறந்தநாளை முன்னிட்டு தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் நீண்டநாட்களுக்கு பிறகு தொண்டர்களை சந்தித்தார்.
கேப்டன் விஜயகாந்த்
தமிழ் சினிமாவில் உச்சம் தொட்ட நடிகர் விஜயகாந்த் 2005-ஆம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்ற கழகம் என்ற கட்சியை நிறுவினார். விஜயகாந்தின் உடல்நிலை நிலை மோசமாவதற்கு முன்பு தமிழகத்தில் முக்கிய கட்சியாக தேமுதிக திகழ்ந்த நிலையில், அவரின் உடல்நிலை பாதிக்கப்படவே தேர்தல் அரசியலில் கட்சி பின்தங்கியது.
2011-ஆம் ஆண்டில் அதிமுகாவுடனான கூட்டணியில் சட்டமன்றத்தில் 29 உறுப்பினர்களுடன் விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவராக பதவி வகித்தார். தற்போது கட்சியும், தொண்டர்களும் துவண்டு போகியிருக்கும் நிலையில், மீண்டும் விஜயகாந்த் எப்போது புத்துயிர் பெற்று வருவார் என்ற எதிர்பார்ப்பு சாமானிய மக்கள் பலரிடமும் தொடர்ந்து நீடித்து கொண்டே தான் வருகின்றது.
தொண்டர்களை சந்தித்தார்
நீண்ட நாட்களாக மீடியா முன்பும், தொண்டர்கள் முன்பும் வராமல் இருந்த விஜயகாந்த் இன்று கட்சி அலுவலகத்தில் தொண்டர்களை சந்தித்தார். சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் சற்று நேரத்திற்கு முன்பு தொண்டர்களை சந்தித்த அவரை கண்டவுடன், தொண்டர்கள் "கேப்டன் கேப்டன்" என முழக்கமிட்டனர்.
வறுமை ஒழிப்பு தினமாக தேமுதிக சார்பில் கொண்டாடப்படும் இன்று விஜயகாந்தை நேரில் காண பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் அங்கு குழுமியுள்ளர்கள்.