இது நம்ம கேப்டனா ?... அடையாளம் தெரியாமல் உருக்குலைந்த விஜயகாந்த் : புலம்பும் ரசிகர்கள்

Vijayakanth
By Irumporai Dec 15, 2022 07:08 AM GMT
Report

எப்போதும் அனல் பறக்கும் தமிழக அரசியல் மைதானத்தில், ஆளாளுக்கு ஸ்கோர் செய்ய நினைக்க, கருணாநிதி, ஜெயலலிதா எனும் இருபெரும் ஆளுமைகள் இருக்கும்போதே களத்தில் இறங்கி அடித்து ஆடியவர் நடிகர் விஜயகாந்த்.

விஜயகாந்த் அரசியல்

 2006-11 ஆண்டில் திமுக ஆட்சியில் இருந்த போது விலைவாசி உயர்வு, பவர்கட் ஏகபட்ட விமர்சனங்களை முனவைத்தார் அப்போதைய அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா , அப்போது அதிமுகவுடன் இணைந்த விஜயகாந்தின் தே.மு,தி.க அணி அமோக வெற்றி பெற்றது.

இது நம்ம கேப்டனா ?... அடையாளம் தெரியாமல் உருக்குலைந்த விஜயகாந்த் : புலம்பும் ரசிகர்கள் | Vijayakanth Health Is Little Weak Fans Sad

ஆனால், தேர்தல் முடிந்து சில மாதங்கள்தான் அ.தி.மு.கவுக்கும் தே.மு.தி.கவுக்கும் இடையே முட்டத் தொடங்கியது. பால்விலை உயர்வு, பேருந்துக்கட்டண உயர்வு குறித்த விவாதத்தில், சட்டமன்றத்தில் அ.தி.மு.க உறுப்பினர்களுக்கும் தே.மு.தி.க உறுப்பினர்களுக்கும் இடையே கடுமையான மோதல் வெடிக்க சட்டப்பேரவையில் அப்போதைய முதலமைச்சர் ஜெயல்லிதா முன்பாக நாக்கை துருத்தியது என அதன் பிறகு விஜயக்காந்தும் தேமுதிகவும் சரிவு பாதையில்தான் சென்றது.

சரிந்த தேமுதிக

   2011ல் ஏற்பட்ட பின்னடைவுக்கு பிறகு தே.மு.தி.க அதிலிருந்து மீளவில்லை என கூறுகின்றனர் அரசியல் விமர்சகர்கள், இந்த நிலையில் தற்போது கடந்த சில மாதங்களாகவே விஜயகாந்தின் உடல்நிலை மிகவும் மோசமாகவே உள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் 75 வது சுதந்திர தின விழாவில் தனது கட்சி அலுவலகத்திற்கு வந்து தேசிய கொடியினை ஏற்றிய விஜய காந்தினை பார்த்து கண்ணீர் வடித்த தொண்டர்கள் பலர்.

இது நம்ம கேப்டனா ?... அடையாளம் தெரியாமல் உருக்குலைந்த விஜயகாந்த் : புலம்பும் ரசிகர்கள் | Vijayakanth Health Is Little Weak Fans Sad

மோசமான உடல்நிலை

இந்த நிலையில் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் தனது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார்.அப்போது விஜயகாந்து தனக்கு கேக் ஊட்டும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

இதனை பார்த்த விஜயகாந்த் கட்சி தொண்டர்களும் அவரது ரசிகர்களும் , மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர் காரணம் விஜயகாந்த் என்றால் நம் நினைவில் வருவது அவரின் கம்பீரமும் மிடுக்கான தோற்றமும் தான் அந்த நபர் தற்போது வீல் சேரில் முககவசம் அணிந்து உடல்நிலை சீராக இல்லாமல் இருப்பது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.