விஜய் டிவி புகழுக்கு மீண்டும் திருமணம்
விஜய் டிவி மூலம் அறிமுகமான புகழுக்கு தற்போது இஸ்லாமிய முறைப்படி 3வது முறையாக திருமணம் நடந்துள்ளது.
காதல் திருமணம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கலக்கப்போவது யாரு, குக் வித் கோமாளி உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர் புகழ்.
இதனையடுத்து, நடிகர் அஜித் நடித்த 'வலிமை', 'எதற்கும் துணிந்தவன்' உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். மேலும், ‘மிஸ்டர் ஜூ கீப்பர்’ என்ற புதிய படத்தில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார் புகழ். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில் கோயம்புத்துார் உமர்பரிதா என்பவரின் மகளான பென்சியாவை திருமணம் செய்து கொண்டார். கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்த தனது காதலியை கடந்த மாதம் இறுதியில் கரம் பிடித்தார்.
விழுப்புரம் மாவட்டம் தீவனுார் பொய்யாமொழி விநாயர் கோவிலில் இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது. இவர்களின் திருமணத்திற்கு சென்ற இயக்குநரும், நடிகருமான சசிகுமார் மலர் துாவி வாழ்த்தினார். இந்த திருமணத்தில் மதுரை முத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இவர்களின் திருமணம் நடைபெறுவதை அறிந்த அப்பகுதி மக்கள் ஏராளமானோர் திரண்டு புகழ் உடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இந்த நிலையில் புகழுக்கு நடந்திருப்பது இது இரண்டாவது திருமணம் என தெரியவந்துள்ளது.
ஓராண்டுக்கு முன்பு பென்சியாவை பதிவு திருமணம் செய்துள்ள புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. கோவையில் உள்ள பெரியார் படிப்பகத்தில் பென்சியாவும், புகழும் கடந்த ஆண்டு பதிவு திருமணம் செய்துள்ளனர்.
தந்தை பெரியார் திராவிட கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் இவர்களின் திருமணத்தை நடத்தி வைத்ததும் தெரியவந்துள்ளது.
புகழ் - பென்சியா காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் கடந்த ஆண்டு ரிஜிஸ்டர் திருமணம் செய்துள்ளனர். இரண்டு தரப்பு குடும்பத்தினர் காதலுக்கு பச்சைக்கொடி காட்டியதால் முறைப்படி ஊரைக் கூட்டி திருமணம் செய்துள்ளனர்.
3-வது திருமணம்
இந்த நிலையில் புகழ் தனது காதலி ஒரு முஸ்லிம் வீட்டு பெண் என்பதால் அவரை முஸ்லிம் முறைப்படி மீண்டும் 3-வது முறையாக திருமணம் செய்துள்ளார்.
இதனிடையே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள புகழ், என் தந்தை அன்பிற்கு ஒரு முறை…
என் தாய் அன்பிற்கு ஒரு முறை…
என் மனைவி குடும்பத்தார் அன்பிற்கு ஒரு முறை…
வேறு அன்பு உள்ளங்கள் ஆசை பட்டாள்
மேலும் ஒரு முறை தயார் .
இந்தியனாக இருக்கிறேன்
எல்லா புகழும் இறைவனுகே என்று பதிவிட்டுள்ளார்.