அடுத்தகட்ட நகர்வு...நிர்வாகிகளுக்கு அதிரடியாக உத்தரவிட்ட விஜய்..!
விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த தகவல் தொழில்நுட்ப பிரிவின் நிர்வாகிகளை வரும் சனிக்கிழமை அன்று சந்தித்து ஆலோசனை நடத்திட நடிகர் விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
அரசியலுக்கு தயாராகும் விஜய்?
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருந்து வரும் நடிகர் விஜய் தற்போது தனது அரசியல் பிரவேசத்திற்கான ஆயுத்த பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றார். கல்வி விழா, இலவச கல்வி கூடங்கள், வழக்கறிஞர் அணி போன்ற அடுத்தடுத்த நடவடிக்கைகளை நடத்தி வரும் அவர் வரும் நாடாளுமன்ற தேர்தலின் போதே கட்சி துவங்கி தேர்தலை சந்திக்கவுள்ளார் என்ற கருத்துக்கள் அரசியல் வட்டத்திலும், சினிமா வட்டத்திலும் அதிகளவில் பேசப்பட்டு வருகினறது.
அடுத்தகட்ட ஆலோசனை
இதில் அடுத்ததாக தற்போது வரும் சனிக்கிழமை அதாவது 26-ஆம் தேதி அன்று நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் செயல்பட்டு வரும் தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள் அதாவது IT பிரிவினரை சந்தித்து ஆலோசனை நடத்துவதற்காக அழைப்பு விடுத்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
விஜயின் உத்தரவின் பேரில் நடத்தப்படும் இந்த கூட்டத்தில் அந்த பிரிவை சேர்ந்த சுமார் 1000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், நகர ஒன்றிய அமைப்புகள் இந்த ஆலோசனையில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து அரசியலில் அதிரடி காட்டி வரும் நடிகர் விஜய், மெதுவாக தன்னுடைய அரசியல் பிரவேசத்திற்கான ஆயுத்தப்பணிகளில் ஈடுபட்டுள்ள நிலையில், இது அரசியல் வட்டாரத்தில் மீண்டும் விவாத பொருளாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.