முதலமைச்சர் விஜய்க்கு விஜய் சேதுபதி வைத்த கோரிக்கை
நடிகர் விஜய் சேதுபதி முதலமைச்சரும், நடிகருமான விஜய்க்கு வைத்த இரண்டு கோரிக்கைகள் என்னவென்று இந்த பதிவில் விரிவாக காணலாம்.
விஜய் சேதுபதி
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக நடிப்பதுடன், பல குணச்சித்திர நடிகராகவும், வசனம் எழுதுபவர் என பன்முக திறமையை கொண்டிருப்பவர் தான் விஜய் சேதுபதி.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி திரைத்துறையிலும் கலக்கி கொண்டிருக்கிறார். தற்போது துக்லக் தர்பார் என்ற படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில், இப்படம் ரிலீஸ்க்கு தயாராகியுள்ளது.

மேலும் ‘லாபம்’, ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’, ‘காத்துவாக்குல இரண்டு காதல்’ போன்ற படங்கள் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.
இந்நிலையில் விஜய் சேதுபதி முதலமைச்சர் விஜய்க்கு இரண்டு கோரிக்கைகளை வைத்துள்ளார்.
கோரிக்கைகள் என்ன?
தமிழக முதலமைச்சர் விஜய் ஆட்சிக்கு வந்து சில தினங்களே ஆன நிலையில் பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் நேரில் சந்தித்து பல கோரிக்கைகளை வைத்த நிலையில், விஜய் சேதுபதியும், அரசு சார்பில் ஓடிடி நிறுவனம் தொடங்க வேண்டும் என்ற கமல்ஹாசனின் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

இரண்டாவது கோரிக்கையாக திரையரங்குகளின் டிக்கெட் கட்டணங்கள் பற்றி கூறியுள்ளார். ஏற்கனவே தயாரிப்பாளர் சங்கத்தினர் டிக்கெட் விலை அதிகரிக்க கோரிக்கை வைத்ததையே, விஜய் சேதுபதியும் டிக்கெட் விலையை அதிகரிக்க கோரிக்கை வைத்துள்ளார்.