விஜய்க்கு அவன் தங்கைன்னா அவ்வளவு விருப்பம்... ஆனா... கொடுத்துவைக்கல... - எஸ்.ஏ.சந்திரசேகர் உருக்கமான பேச்சு

Vijay Sister விஜய் S. A. Chandrasekhar தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தங்கை வித்யா Vidhya
By Nandhini Mar 14, 2022 06:14 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும், நட்சத்திர நடிகராகவும் வலம் வருபவர் நடிகர் விஜய். இவருடைய தந்தைதான் எஸ்.ஏ.சந்திரசேகர். தமிழ் சினிமாவில் நடிகர் விஜய்யின் ஆரம்பக் கட்டத்தில் ஒரு ஏணிப்படியாக இருந்து ஏற்றிவிட்டார் சந்திரசேகர்.

1980களில் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராகவும் சந்திரசேகர் திகழ்ந்தவர். தமிழ் மட்டுமல்லாமல் பல மொழிகளில் இவர் படங்களை இயக்கி உள்ளார். சட்டம் ஒரு இருட்டறை, தேவா, ஒன்ஸ்மோர், நான் சிகப்பு மனிதன், நெஞ்சிருக்கும் வரை போன்ற படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன.

தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களாக இருக்கும் ஷங்கர், எம்.ராஜேஷ், பொன்ராம் ஆகியோர் இவரிடம் உதவி இயக்குநர்களாக பணியாற்றியுள்ளனர்.

இந்நிலையில், சமீபத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் பிளாட்பாரத்தில் படுத்து தூங்குவதுபோல் ஒரு வீடியோவை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டார். இந்த வீடியோ மிகவும் வைரலாக பரவியது.

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், யார் இந்த எஸ்.ஏ.சி என்ற யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்திருக்கிறார். அந்த யூடியூப் சேனலில் தான் வாழ்க்கையில் கடந்து வந்த பாதை குறித்து உருக்கமாக பேசியுள்ளார்.

விஜய்க்கு அவன் தங்கைன்னா அவ்வளவு விருப்பம்... ஆனா... கொடுத்துவைக்கல... - எஸ்.ஏ.சந்திரசேகர் உருக்கமான பேச்சு | Vijay S A Chandrasekhar Sister Vidhya

அந்த வீடியோவில் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசுகையில்,

ஒரு காலத்தில் நான் கஷ்டப்பட்டபோது, இந்த சென்னை தியாகராய நகரில் உள்ள பிளாட்ஃபார்மில் தான் படுத்து தூங்கினேன். இங்கிருந்துதான் என் வாழ்க்கையை ஆரம்பித்தேன்.

சொத்து, சுகம் சேர்ந்தாலும், ஆடம்பர வீட்டில் போய் படுத்தால் நிம்மதி இருக்காது. ஆனால், இந்த பிளாட்பாரத்தில் படுத்து தூங்கினால், புது உத்வேகத்தோடு பழைய எஸ்.ஏ.சந்திரசேகராக நிம்மதியான தூக்கத்தை தூங்க முடிகிறது.

ஒரு காலத்தில் எஸ்.வி.சந்திரசேகர் மகன் தான் நடிகர் விஜய் என்று கூறினார்கள். ஆனால், காலப்போக்கில் நடிகர் விஜய்யின் அப்பாதான் எஸ்.வி.சந்திரசேகர் என்று கூறுகிறார்கள். அந்த அளவிற்கு என் மகன் என்னை பெருமைப்படுத்திவிட்டான்.

எனக்கு கடவுள் இரண்டு பிள்ளைகளை கொடுத்தார். ஒன்று வித்யா, மற்றொன்று விஜய். இதில் வித்யா, சிறுவயதிலேயே படுசுட்டியா இருப்பா. அம்மாவை ஏய் ஷோபான்னு தான் கூப்பிடுவாள். விஜய்யை கூட டேய் அண்ணானு தான் சொல்வாள். விஜய்க்கு வித்யானா ரொம்ப பிடிக்கும்.

எங்களை விட கடவுளுக்கு வித்யா மேல் ரொம்ப பாசம் போல, மூன்றரை வயசுலேயே கூப்பிட்டுக்கிட்டார். அந்த நாளை என்னால் மறக்கவே முடியது. ஒரு பிள்ளையை கடவுள் எடுத்துக் கொண்டாலும் இன்னொரு பிள்ளை மூலம் உலகமெல்லாம் எனக்கு நிறைய பிள்ளைகள் கிடைத்திருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் நெகிழ்ச்சியோடு பேசியுள்ளார்.

நடிகர் விஜய்யும், அவரது தந்தை எஸ்.வி.சந்திரசேகரும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக பேசிக்கொள்வதில்லை என்று சொல்லப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.