கூலி தொழிலாளியை ரத்தம் சொட்ட சொட்ட தாக்கிய விஜய் மக்கள் இயக்க நிர்வாகி - நெஞ்சை பதற வைத்த வீடியோ
பல்லாவரத்தைச் சேர்ந்தவர் அணிஷ். இவர் விஜய் மக்கள் இயக்க நிர்வாகியாக உள்ளார். இவர் ஐஸ் கடை ஒன்றை வைத்து நடத்தி வருகிறார்.
அந்த ஐஸ் கடையில் பாலாஜி என்பவர் வேலை பார்த்து வருகிறார். ஆனால், அணிஷ் சரியாக பாலாஜிக்கு சம்பளம் கொடுக்காமல் வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு கடையில் 3 செல்போன், ரூ. 10 ஆயிரம் காணாமல் போனது. திடீரென்று 4 நாட்களாக பாலாஜியும் கடைக்கு வரவில்லை.
இதனால், அணிஷ்க்கு பாலாஜி மேல் சற்று சந்தேகம் எழுந்தது. இதனையடுத்து, அணிஷ், அவருடைய நண்பர்களுடன் சேர்ந்து பாலாஜியை பிடித்து கையைக் கட்டினர்.
இதனையடுத்து, செல்போன், பணம் எங்கே? என்று கேட்டு பாலாஜியை சராமரியாக தாக்கினர். ரத்தம் சொட்ட சொட்ட அந்த கும்பல் பாலாஜியை பயங்கரமாக தாக்கியது.
இதில், பாலாஜியின் தலையிலிருந்து ரத்தம் அதிகமாக வந்ததால், அவர் மயங்கி கீழே சரிந்தார். இதனையடுத்து, பயந்துபோன அக்கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.
அந்த வழியாக வந்தவர்கள், பாலாஜி ரத்தம் வெள்ளத்தில் கிடப்பதைப் பார்த்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பாலாஜியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த பல்லாவரம் போலீசார் தாக்குதல் நடத்திய 9 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
தற்போது சமூகவலைத்தளங்களில் பாலாஜியை, அணிஷ் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து தாக்கும் அதிர்ச்சி வீடியோ வைரலாகி வருகிறது.
கூலி தொழிலாளியை கட்டி வைத்து விஜய் மக்கள் இயக்க நிர்வாகியும், அவரது நண்பர்களும் கொலைவெறி தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.