ஜெயலலிதா பாணியில் தவெக மாநாட்டுக்கு அழைப்புவிடுத்த விஜய் -இதை கவனிச்சீங்களா!
ஜெயலிதா வரிகளை வைத்து தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாட்டுக்கு அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் அழைப்பு விடுத்துள்ளார்.
ஜெயலிதா
இது குறித்து அவர் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் , "தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டுக்கான கால்கோள் விழா நடந்திருக்கிறது.
இந்த முதல் மாநாடு நம் கழகத்தின் அரசியல் கொள்கை பிரகடன மாநாடு. அந்த மாநாட்டில் பொறுப்பான குடிமகனாகவும், முன்னுதாரணமாகவும் கழகத்தினர் இருக்க வேண்டும்.
மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தொடங்கி, மாநாட்டில் பங்கேற்பது வரை நம் கழகத்தினர் ராணுவக் கட்டுப்பாட்டுடன் இயங்குவர் என்பதை இந்த நாடும், நாட்டு மக்களும் உணர வேண்டும், நாம் உணர வைக்க வேண்டும். கொண்டாட்டம் இருக்கலாம், குதூகலம் இருக்கலாம்.
தவெக மாநாடு
ஆனால் ஓரிடத்தில் கூடினால் கட்டுப்பாடு மிக்கதாக மட்டுமில்லாமல் பக்குவம் நிறைந்ததாக இருக்கும் என்பதை நாம் நிரூபித்துக் காட்ட வேண்டும். இவர்களுக்கு அரசியல் தெரியுமா?, மாநாடு என்றால் என்னவென்று தெரியுமா? என்றெல்லாம் கேட்கிறார்கள்.
— TVK Vijay (@tvkvijayhq) October 4, 2024
இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்திக் காட்டி நாம் பேருக்கு ஆரம்பிக்கப்பட்ட அரசியல் கட்சி அல்ல என்பதை அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும்.
வேகமாக இருப்பதைவிட விவேகமாக இருக்க வேண்டும், எதார்த்தமாக இருப்பதை விட எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்" என கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.