சரியான நேரத்தில் கிடைக்கும்..பொறுமையா இருங்க - விக்னேஷ் சிவன் சொன்ன சூசகம்!
விக்னேஷ் சிவன், குழந்தை சர்ச்சை விவகாரத்தில் மறைமுகமாக பதிலளித்துள்ளதாக கூறப்படுகிறது.
வாடகைத்தாய்
விக்னேஷ்சிவன்- நயன்தாரா தம்பதி இரண்டு ஆண் குழந்தைகளுக்கு பெற்றோர் ஆகியிருக்கும் செய்தியை அறிவித்தனர். திருமணம் முடிந்து நான்கு மாதங்களே ஆகியிருக்கும் நிலையில் வாடகைத்தாய் மூலம் குழந்தைப் பெற்றது சரியா என பல சர்ச்சைகள் வெடித்த வண்ணம் உள்ளது.
தற்போது, அமைச்சர் சுப்பிரமணியன் வாடகைத்தாய் விவகாரம் தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், அதற்கான அறிக்கையை 1 வாரத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
விக்கி சூசகம்?
ஆனால், இதுவரை விக்கி - நயன் தம்பதியிடம் இருந்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. இந்நிலையில், இயக்குநர் விக்னேஷ்சிவன் தனது சமூகவலைதள பக்கத்தில் இதற்கெல்லாம் மறைமுகமாக பதிலளிக்கும் விதமாக பதிவுகளை பகிர்ந்து வருவதாக கூறப்படுகிறது.
அதில், ‘நீங்கள் உலகத்தை மாற்ற விரும்பினால், முதலில் உங்கள் வீட்டிற்குச் சென்று குழந்தைகளை நேசியுங்கள்’ எனவும், ‘எல்லாமே உங்களுக்கு சரியான நேரத்தில் கிடைக்கும். அதுவரை பொறுமையாக இருங்கள். இதுவரை கிடைத்தவற்றிற்கு நன்றி தெரிவியுங்கள்’ என்றும்
‘எப்போதும் உங்களுக்காக உங்கள் வளர்ச்சி மீது பரிவு கொண்டு, உண்மையான அக்கறை வைத்திருக்கிறார்களோ அவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுங்கள். அவர்கள் தான் உங்களுடைய உண்மையான மக்கள்’ என அந்தப் பதிவுகளின் வாயிலாக தெரிவித்துள்ளார்.