திருமணத்திற்கு நாள் குறித்த நயன்தாரா - எப்ப கல்யாணம் தெரியுமா?
இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் தங்கள் திருமணத்திற்கு நாள் குறித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக உள்ள நயன்தாரா நானும் ரௌடி தான் படத்தில் நடித்த போது அப்படத்தின் இயக்குநரான விக்னேஷ் சிவனுடன் காதலில் விழுந்தார். 6 வருடங்களை கடந்துள்ள இந்த காதல் எப்போது திருமணத்தில் முடியும் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இதனிடையே நெற்றிக்கண் படத்தின் புரமோஷனுக்காக விஜய் டிவியில் தொகுப்பாளர் டிடிக்கு அளித்த பேட்டியில் தனக்கும் விக்னேஷ் சிவனுக்கும் நிச்சயதார்த்தம் ஆகிவிட்டதாக நயன்தாரா தெரிவித்து இருந்தார். இதனால் இந்தாண்டு அவர் திருமணம் செய்வார் என கூறப்பட்டது.
சமீபத்தில் சில தினங்களுக்கு முன்பு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் படம் ரிலீசாகியுள்ளது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். கண்மணி என்ற கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை நயன்தாரா வெளிப்படுத்தியிருந்தார்.
இந்நிலையில் படத்தின் ரிலீசை தொடர்ந்து கோயில்களில் சாமி தரிசனம் செய்து வந்த நிலையில் திருப்பதிக்கும் சென்றிருந்தனர். இன்றைய தினம் மீண்டும் திருப்பதிக்கு இருவரும் சென்றனர். அங்கு தங்களது திருமண ஏற்பாடுகளை அவர்கள் பார்வையிட்டதாக கூறப்படுகிறது. மேலும் வரும் ஜூன் 9ம் தேதி இவர்கள் இருவருக்கும் திருப்பதியில் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.