‘’ திருப்பதி வந்தா திருப்பம் ‘’ : திருப்பதியில் தரிசனம் செய்த விக்னேஷ் சிவன் - நயன்தாரா வைரலாகும் புகைப்படம்
நடிகை நயன்தாராவும் அவருடைய காதலர் விக்னேஷ் சிவனும் திருப்பதிக்கு சென்று எடுத்துகொண்ட புகைப்படம் வைரலாகியுள்ளது.
தற்போது விக்னேஷ் சிவன் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களான விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா, ஆகியோர் நடிப்பில் ‘காத்து வாக்குல இரண்டு காதல்’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இந்த திரைப்படம் இன்று (18.04.2022) அன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் நயன்தாரா, தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் திருப்பதி கோவிலுக்கு சென்றுள்ளார். அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படத்தை விக்னேஷ் சிவன் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து திருப்பதியிலிருந்து அதிகாலை 2.22 மணிக்கு ‘காத்து வாக்குல இரண்டு காதல்’ இன்றிலிருந்து உங்களுடையது என்று குறிப்பிட்டுள்ளார்.
காத்துவாக்குல படம் வெற்றிபெற வேண்டி இருவரும் திருப்பதிக்கு சென்று சாரி தரிசனம் செய்துள்ளனர் என்று ரசிகர்கள் பதிவிட்டு, இந்த புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர்.