நயன்தாராவை இறுக்கமாக கட்டியணைத்த விக்னேஷ் சிவன் - குழந்தைகளுடன் ஹவுஸ் பார்ட்டி
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரும் நயன்தாரா தனது கணவரை இறுக்க கட்டியணைத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
காதல் திருமணம்
கடந்த 2015ம் ஆண்டு ‘நானும் ரவுடிதான்’ படத்தில் நயன்தாரா நடித்தார். இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கினார்.
இந்த படத்தின் படப்பிடிப்பில்தான் நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் மலர்ந்தது. கடந்த 7 வருடமாக காதலித்து வந்த இவர்கள், லிவிங் டு கெதர் முறையில் வாழ்ந்து வந்தனர். இந்த ஆண்டு ஜூன் 9ம் தேதி மாமல்லபுரத்தில் உள்ள ஒரு ரிசார்ட்டில் திருமணம் செய்துகொண்டனர்.
இரட்டை குழந்தை விவகாரம்
இந்த நிலையில் திருமணமான நான்காவது மாதத்திலேயே விக்னேஷ் சிவன், தானும் நயன்தாராவும் அப்பா, அம்மா ஆகிவிட்டோம் என அறிவித்திருந்தார்.
மேலும் வாடகைத் தாய் மூலம் அவர்கள் குழந்தை பெற்றுக் கொண்டதும் தெரிய வந்தது. இந்நிலையில் சட்டத்திற்கு எதிராக அவர்கள் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டதாக சர்ச்சைகள் எழுந்தது.
அதனைத் தொடர்ந்து இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் 2016ம் ஆண்டே பதிவு திருமணம் செய்து கொண்டதாகவும், சட்ட விதிமுறைகளை மீறி அவர்கள் குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை எனவும் தெரிவித்தனர்.
கட்டியணைத்த நயன்தாரா
இந்த நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு அவர்களது புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் அவர்கள் தங்களது நண்பர்களுடன் உள்ளனர்.
மேலும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் இறுக்கமாக கட்டியணைத்து போஸ் கொடுத்துள்ளனர். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
மேலும் விரைவில் தங்கள் குழந்தைகளின் புகைப்படத்தை வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.