கண்மணி அன்போட காதலன் நான் : டப்பிங்கில் விக்னேஷ் சிவன் - நயன் காதல்

nayanthara vigneshsivan KaathuVaakulaRenduKaadhal dubbingtheater
By Irumporai Dec 02, 2021 06:50 AM GMT
Report

காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திற்காக நயன்தாரா டப்பிங் பேசும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடிப்பில் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' திரைப்படம் உருவாகி வருகிறது. விக்னேஷ் சிவனின் முந்தைய படங்கள் போலவே இந்தப் படமும் காமெடி ரொமான்ஸ் ஜேர்னரில் உருவாகி வருகிறது. 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கின்றனர்

இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்திலிருந்து வெளியான இரண்டு பாடல்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது படத்தின் மூன்றாம் பாடல் விரைவில் வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

படத்தின் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. தற்போது படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறது. நயன்தாரா தன் சொந்தக் குரலில் இந்தப் படத்திற்கு டப்பிங் பேசுகிறார். வழக்கமாக தீபா வெங்கட் தான் நயன்தாராவிற்கு டப்பிங் பேசுவார்

 ஒரு சில படங்களில் மட்டுமே நயன்தாரா சொந்தக் குரலில் குறிப்பிடத்தக்கது. விக்னேஷ் சிவனும் நயனும் டப்பிங் ஸ்டுடியோவில் காதல் பொங்க காணப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

அந்தப் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ள விக்னேஷ் சிவன் "கண்மணி அன்போடு காதலன் நான் எழுதிய டயலாக் நீயே டப் பண்றது மிகுந்த சந்தோசம்" என்றுதெரிவித்துள்ளார்.