பொதுமக்கள் மத்தியில் நயன்தாராவை நச்சுனு முத்தமிட்ட விக்னேஷ் சிவன்
நயன்தாராவை பொதுமக்கள் மத்தியில் நச்சுனு முத்தமிட்ட விக்னேஷ் சிவனின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
திருமணம்
தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை நயன்தாரா கடந்த 7 ஆண்டுகளாக இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்த வந்தனர்.
திருமணத்திற்கு முன்பிலிருந்து பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா சென்று வந்த இவர்கள் கடந்த ஜுன் 9ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் பிரபலங்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.
முதல் ஹனிமூன்
திருமணம் முடிந்த பின் முதல் முறையாக தேனிலவுக்காக தாய்லாந்து நாட்டிற்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து புகைப்படத்தை எடுத்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவேற்றினார் விக்னேஷ் சிவன்.இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் இணையத்தில் வைரலானது.
பின்னர் இந்தியா திரும்பிய இருவரும் தங்கள் படப்பிடிப்பு வேலைகளில் பிசியாகினர். நயன்தாரா ஜவான் படத்தில் நடத்து வந்தார்.
விக்னேஷ் சிவன் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் பிசியாகினார்.
திருமணத்திற்கு பிறகு சுற்றுலா
பின்னர் செஸ் ஒலிம்பியாட் போட்டி நிறைவு பெற்ற நிலையில் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் ஸ்பெயின் நாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
திருமணத்திற்கு பிறகு 2-வது முறையாக சென்றுள்ள இவர்களில் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஹனிமூன் சென்றுள்ளனர் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
நச்சு என்று இச் கொடுத்த விக்னேஷ் சிவன்
இந்த நிலையில் இந்தியா முழுவதும் நேற்று சுதந்திர தினவிழா கொண்டப்பட்டது. இதனிடையே நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஸ்பெயின் நாட்டில் தேசிய கொடியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்னேஷ் சிவன் ஸ்பெயினின் முக்கிய இடங்களில் புகைப்படம் எடுத்து கொண்டுள்ளார்.
அப்போது பொதுமக்கள் மத்தியில் நயன்தாராவை விக்னேஷ் சிவன் கட்டி அணைத்து முத்தம் கொடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.