கதை சொல்ல போன இடத்தில் காதல் வலை வீசிய விக்னேஷ் சிவன் - அதிர்ச்சி தகவல்
நயன்தாராவை முதன்முதலில் சந்தித்து கதை சொன்ன அனுபவம் பற்றி விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ள தகவல் தற்போது வைரலாகியுள்ளது.
2012 ஆம் ஆண்டு சிம்பு நடித்த போடா போடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான விக்னேஷ் சிவன் அடுத்ததாக 2015 ஆம் ஆண்டு நானும் ரௌடி தான் படத்தை இயக்கியிருந்தார். மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற இப்படத்தில் ஹீரோயினாக நயன்தாரா நடித்திருந்தார்.
முதல் படம் வெற்றி பெறாத நிலையில் இடையில் பாடல்கள் எழுதுவதில் விக்னேஷ் சிவன் கவனம் செலுத்தினார். இதனிடையே நானும் ரௌடி தான் படக்கதையை பத்து ஹீரோக்களுக்கு மேல் கூறிய நிலையில் விஜய் சேதுபதி தான் விக்னேஷ் சிவன் மீது நம்பிக்கை வைத்து நடித்திருந்தார்.
அதற்கு காரணம் தனக்கு போடா போடி படம் மிகவும் பிடித்த படம் என்பதால் இவ்வாய்ப்பு கொடுத்ததாக விஜய் சேதுபதி ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். அதேபோல நயன்தாராவும் கதை கேட்க ஒப்புக்கொண்ட நிலையில் விக்னேஷ் சிவன் மனதில் ஒரே எண்ணம் தான் இருந்துள்ளது. படத்தில் நயன் நடிக்காவிட்டாலும் பரவாயில்லை.
அவர் போன்ற ஒரு முன்னணி நடிகையிடம் இரண்டு மணி நேரம் அருகில் அமர்ந்து கதை சொல்லும் வாய்ப்பு கிடைத்ததே போதும் என்ற மனநிலையில் தான் விக்னேஷ் சிவன் கதை சொல்ல சென்றாராம். கடைசியில் நயனுக்கு கதை மட்டும் இல்லை..விக்னேஷ் சிவனையும் பிடித்துப் போனது ஊரே அறிந்த கதை...!