திரௌபதி முர்முவின் வெற்றியை கொண்டாட சொந்த ஊரில் 50,000 ஆயிரம் லட்டுக்கள் தயார்..!
குடியரசுத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றனர்.
வெற்றியை கொண்டாட லட்டுக்கள் தயார்
இந்நிலையில் குடியரசு தலைவராக திரவுபதி முர்மு தேர்வாவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் கொண்டாட்டங்களுக்காக ஒடிசாவில் அவரது சொந்த ஊரான ராய்ரங்பூர் தயாராகி வருகிறது.
ஒடிசாவின் ராய்ரங்பூரில் முடிவுகள் அறிவிப்பிற்கு விநியோகிக்க 50,000 லட்டுக்கள் தயாராக உள்ளன. முர்முவின் சொந்த கிராமத்திற்கு அதை சுற்றியுள்ள கிராமத்தினரும் வந்தபடி உள்ளனர்.
இவர்கள் அனைவரும் இணைந்து முர்முவின் வெற்றியை மாபெரும் ஊர்வலம் நடத்திக் கொண்டாட உள்ளனர். இதில், ஒடிசா பழங்குடிகளின் பாரம்பரிய நடனமும் இடம்பெற உள்ளது.
இதற்காக அதன் கலைஞர்களும் ராய்ரங்பூர் வந்து சேர்ந்துள்ளனர். திரவுபதியின் வெற்றிக்கு வாழ்த்தி ஒடிசா முழுவதிலும் நூற்றுக்கணக்கான பெரும் பதாகைகளும் பார்வைக்கு வைக்கப்பட உள்ளன.
ராய்ரங்பூரின் பாஜக பிரிவினரும் தனியாக வெற்றி கொண்டாட்டம் நடத்த உள்ளனர். இவர்களும் ஒரு ஊர்வலம் நடத்தி அனைவருக்கும் இனிப்புகள் வழங்க 50,000 லட்டுக்களை தயார் செய்துள்ளனர்.